பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
00:14
மும்பை : ‘அடமான சொத்துகள் மீதான வட்டி சுமை அதிகரித்தால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ்’ எச்சரித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கி, கடந்த மாதம், ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தியுள்ளதால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெறும் கடனுக்கான செலவும் உயர்ந்துள்ளது. இதனால் அவை, அடமான சொத்துகள் மீது வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தும். இது, இவ்வகை சொத்துகளை அடமானம் வைத்து தொழில் புரிந்து வரும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வட்டி சுமையை அதிகரிக்க வழிகோலும்.
பணமதிப்பு நீக்கம் :
இந்நிறுவனங்கள், அவற்றின் குறுகிய கால பணத் தேவைகளுக்கு, சொத்துகளை பிணையம் வைத்து கடன் பெறவே அதிகம் விரும்புகின்றன. இந்த கடனுக்கான வட்டி உயர்ந்தால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திரும்ப செலுத்த வேண்டிய கடன் தவணை அதிகரிக்கும். ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சொத்து அடமான கடனுக்கான வட்டி சுமையும் சேர்ந்தால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அவை, கடன் தவணையை குறித்த காலத்தில் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அதேசமயம், இதனால் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், அடமான சொத்து மதிப்பிற்கு மிகக் குறைவாகவே கடன் வழங்கப்படுகிறது. அத்துடன், கடனுக்கான பிணையாக சொத்து உள்ளதால், ‘சர்பசி’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவை கடனை மீட்டு விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|