பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:14
புதுடில்லி : மத்திய அரசு, 50 ஜவுளி வகைகளின் இறக்குமதி வரியை, இரு மடங்கு உயர்த்தி, 20 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
இதன்படி, ஜாக்கெட்கள், சூட்டுகள், தரை விரிப்புகள் உட்பட, முழுமையாக தயாரிக்கப்பட்ட ஆடைகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரி உயர்ந்துள்ளது. இதில், இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகள், குழந்தை உடைகள், கால்சட்டைகள், கையால் நெய்த துணி வகைகள் ஆகியவையும் அடங்கும் என்பதால், அவற்றின் விலை உயரும்.
இதனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், இவ்வகை ஜவுளிகளுக்கான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக, இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உற்பத்தி உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல், அஜய் சஹாய் கூறியதாவது: பெரும்பாலான ஜவுளி வகைகளுக்கு, இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். அதேசமயம், மிகக் குறைவான வளர்ச்சிப் பிரிவைச் சேர்ந்த, வங்கதேசம் போன்ற நாடுகளின் ஜவுளி இறக்குமதிக்கு, வரி விலக்கு சலுகை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|