பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:16
புதுடில்லி : இந்தாண்டு, ஜன., – ஜூன் வரை, 88 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 1,546 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்துள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 50 நிறுவனங்கள் திரட்டிய, 660 கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகமாகும். இதே காலத்தில், பங்கு வெளியீட்டு தொகையும், சராசரியாக, 13 கோடியில் இருந்து, 17.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், 88 நிறுவனங்களில், நான்கு நிறுவனங்களின் பங்குகளை ஒதுக்கக் கோரி, 100 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் திரட்டும் நிதியை, வர்த்தக விரிவாக்கத்திற்கும், நடைமுறை தேவைகளை சமாளிக்கவும், இதர நிர்வாக திட்டங்களுக்கும், நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
இது குறித்து, ‘பான்டமத் அட்வைசரி சர்வீசஸ் குரூப்’ நிறுவனத்தின் குழு நிர்வாக இயக்குனர், மகாவிர் லுனாவத் கூறியதாவது: சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவு துவங்கி, ஆறு ஆண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு, பங்கு வெளியீட்டு விலை கவர்ச்சிகரமாக இருப்பதும் ஒரு காரணம். பங்குச் சந்தை பட்டியலில் சேர்த்த பின், பெரும்பாலான பங்குகள் விலை அதிகரிக்கிறது. இதனால், பங்கு வெளியீட்டிற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
அதேசமயம், இந்த ஆண்டு பங்குச் சந்தை சரிவின் போது ஏற்பட்ட பாதிப்பில், சிறிய, நடுத்தர நிறுவனங்களும் தப்பவில்லை. ஒரு சில பங்குகள் விலை குறைந்து உள்ளது. இருந்தபோதிலும், இப்பிரிவின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|