லேலண்டு வருவாய் 47 சதவீதம் வளர்ச்சிலேலண்டு வருவாய் 47 சதவீதம் வளர்ச்சி ... இந்தியா சிறப்பாக வளர்ச்சி காணும்: பன்னாட்டு நிதியம் மதிப்பீடு இந்தியா சிறப்பாக வளர்ச்சி காணும்: பன்னாட்டு நிதியம் மதிப்பீடு ...
கனரக வாகனங்களில் அதிக சரக்கிற்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
23:27

புதுடில்லி : மத்­திய அரசு, லாரி, டிரக் உள்­ளிட்ட கன­ரக வாக­னங்­களில் கொண்டு செல்­லும் சரக்­கின் எடை அளவை, 25 சத­வீ­தம் உயர்த்தி நிர்­ண­யித்­துள்­ளது. அத்­து­டன், வர்த்­தக வாக­னங்­க­ளுக்கு, எப்.சி., எனப்­படும் தகு­திச் சான்­றி­தழ் புதுப்­பிப்பு காலத்தை, ஓராண்­டில் இருந்து இரண்டு ஆண்­டு­க­ளாக உயர்த்­தி­யுள்­ளது. இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­க­ளின் செல­வி­னம் குறை­யும்.

இது குறித்து, மத்­திய நெடுஞ்­சா­லை­கள் துறை அமைச்­சர், நிதின் கட்­கரி கூறி­ய­தா­வது: சர்­வ­தேச நாடு­களை பின்­பற்றி, கன­ரக வாக­னங்­களில் அனு­ம­திக்­கப்­படும் சரக்­கின் எடை, 25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இதன்­படி, 16 டன் வாக­னம், 19 டன் சரக்கை கொண்டு செல்­ல­லாம். 25 மற்­றும் 32 டன் வாக­னங்­கள் முறையே, 28.5 டன் மற்­றும் 42 டன் சரக்கை கொண்டு செல்­ல­லாம். இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வி­னம், 2 சத­வீ­தம் குறை­யும். வளர்ந்த நாடு­களில், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு, 8 சத­வீ­த­மாக உள்­ளது. இது, இந்­தி­யா­வில், 13 – -14 சத­வீ­த­மாக உள்­ளது.

தற்­போது, கன­ரக வாக­னங்­கள் அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்­திய சாலை­க­ளின் தர­மும் மேம்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, கன­ரக வாக­னங்­களில், சரக்கு எடை­ய­ளவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த, 1983ம் ஆண்­டுக்கு பின், தற்­போது தான், வாகன சுமை தொடர்­பான விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய விதி­மு­றை­களை அமல்­ப­டுத்த, அனைத்து மாநில அர­சு­க­ளுக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நடை­மு­றை­யால், அள­விற்­க­தி­க­மான எடை­யு­டன் வாக­னங்­கள் செல்­வது குறை­யும்.

விதி­களை மீறு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுத்து, கூடு­தல் சரக்கை அகற்­றிய பிறகே, போக்­கு­வ­ரத்­துக்கு அனு­ம­திக்க வேண்­டும் என, மாநில அர­சு­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. புதிய விதி­மு­றை­யால், சாலை போக்­கு­வ­ரத்­தில் லஞ்ச ஊழ­லும் கட்­டுக்­குள் வரும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

பாது­காப்பு முக்­கி­யம் :
புதிய விதிமுறை குறித்து, இந்­திய மோட்­டார் வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கத்தின் தலைவர், அபய் பிரோடியா கூறியதாவது: நாட்­டில், வர்த்­தக வாகன போக்­கு­வ­ரத்­தினை முன்­னேற்­றும் வகை­யில், மத்­திய அரசு எடுத்த சரி­யான நட­வ­டிக்கை இது. இருப்­பி­னும், இந்த விதி­முறை, புதிய வாக­னங்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­து­மாறு இருந்­தால் நல்­லது. தற்­போது இயங்கி வரும் பழைய வாக­னங்­களில், கூடு­தல் சுமை ஏற்­று­வது பாது­காப்­பா­ன­தாக இருக்­காது. எனவே, பாது­காப்பை முன்­னிட்டு, புதிய வாக­னங்­க­ளுக்கு மட்­டுமே அதிக சுமை ஏற்­றும் அனு­மதி வழங்க வேண்­டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)