பதிவு செய்த நாள்
19 ஜூலை2018
23:54
திருப்பூர் : பெங்களூரில் நேற்று நடந்த கூட்டத்தில், ஏற்றுமதி சலுகை விகிதத்தை உயர்த்த, ‘டியூட்டி டிராபேக்’ கமிட்டியிடம், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் முறையிட்டுள்ளனர்.
பெங்களூரில் நேற்று, டியூட்டி டிராபேக் கமிட்டி கூட்டம் நடந்தது. கமிட்டி தலைவர் பிள்ளை, உறுப்பினர்கள் பரான்டி, கவுதம்ரே ஆகியோர், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், நிர்வாக செயலர் சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மஹூ உள்ளிட்டோர், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினரின் கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.
மனு விபரம்: டியூட்டி டிராபேக், ஸ்டேட் லெவிஸ் விகிதங்கள் குறைக்கப்பட்டதால், பிற நாடுகளுடனான வர்த்தக போட்டிகளை எதிர்கொள்வது, ஆயத்த ஆடை துறையினருக்கு சவாலாக உள்ளது. 2017 அக்., முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 21 சதவீதம் சரிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 14.22 சதவீதமும்; பின்னலாடை ஏற்றுமதியில், 22 சதவீதமும் சரிந்துள்ளது. வங்கதேசம், வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளில், சீன நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.
இதனால், எதிர்காலத்தில் வர்த்தக போட்டி மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. நாட்டின் ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, டியூட்டி டிராபேக், 5 சதவீதம்; ஸ்டேட் லெவிஸ் சலுகை, 4 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|