பதிவு செய்த நாள்
19 ஜூலை2018
23:55
புதுடில்லி : புனேவைச் சேர்ந்த, பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டிக் கொள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் நிறுவனம், தங்கம், வெள்ளி நகைகள், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட உள்ளன. பங்கு வெளியீட்டுக்கான அனுமதி கோரி, கடந்த மே மாதம், செபிக்கு இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து, தற்போது செபி பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை வழங்கி உள்ளது. பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எச்.டி.எப்.சி., பேங்க், யெஸ் செக்யூரிட்டீஸ், லிங்க் இன்டைம் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|