உரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவுஉரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் ... ... மீண்டும் வருகிறது, ‘டூட்டி டிரா பேக்’  : சிறிய ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர் மீண்டும் வருகிறது, ‘டூட்டி டிரா பேக்’ : சிறிய ஏற்றுமதியாளர்கள் பயன் ... ...
கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் கம்யூ., அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
00:58

புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், 'சீனியர் செக்யூர்டு நோட்ஸ்' கடன் பத்திர முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஆக., 10ல் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கடன் பத்திரங்களின் மறுசீரமைப்பு, முதிர்வு காலத்தை நீட்டிப்பது, சொத்து விற்பனை உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்படும் என, தெரிகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 2015, மே மாதம், டாலரில் முதலீடு செய்யக்கூடிய, சீனியர் செக்யூர்டு நோட்ஸ் கடன் பத்திரங்களை, லண்டன் பங்குச் சந்தையில் வெளியிட்டது.இக்கடன் பத்திரங்கள், ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துடன், 6.5 சதவீத வட்டி விகிதத்தில் வெளியிடப்பட்டன.இந்நிலையில், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கடந்த ஆண்டு இறுதியில், தொலை தொடர்பு சேவைப் பிரிவை மூடியது. அத்துடன், இதர சொத்துகளை விற்பனை செய்து, கடன்களை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இதன் காரணமாக, சீனியர் செக்யூர்டு நோட்ஸ் கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு, வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கடன் பத்திர முதலீட்டாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு, முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் கோரப்படும். முக்கியமாக, கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தை, 2028 வரை தள்ளி வைக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், இந்தாண்டு, ஜன., - மார்ச் காலாண்டில், 19 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)