கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை: கவ­னத்தை ஈர்க்­கும் ஈ.டி.எப்., முத­லீ­டு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
23:30

உலக அள­வில், குறி­யீடு சார்ந்த முத­லீ­டு­கள், மிக அதி­க­மாக வளர்ந்து வரும் கால­கட்­டத்­தில் நாம் வாழ்­கி­றோம். அப்­ப­டிப்­பட்ட முத­லீட்டு முறை­களில் ஒன்று, ஈ.டி.எப்.

ஈ.டி.எப்., என்று அழைக்­கப்­படும் இந்த முத­லீட்டு முறை­யின் முழுப் பெயர், ‘எக்ஸ்­சேஞ்ச் டிரே­டட் பண்டு’ என்­ப­தா­கும். அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­யில், இந்த வகை முத­லீ­டு­கள், வர­லாறு காணாத அளவு உயர்ந்து உள்ளன. மியூச்­சு­வல் பண்­டு­களை விட, இந்த ஈ.டி.எப்., முத­லீட்டை, உலக முத­லீட்­டா­ளர்­கள் அதி­கம் விரும்­பு­கின்­ற­னர்.

கடந்த, 15 ஆண்­டு­களில், ஈ.டி.எப்., ஒரு தனிப் பெரும் தொழி­லா­கவே வளர்ந்­துள்­ளது என்­றால், அது நிச்­ச­யம் மிகை­யில்லை. 2005ல், உலக அள­வில், 417 பில்­லி­யன் டால­ராக இருந்த இந்த, ஈ.டி.எப்., முத­லீ­டு­கள், 2017ம் ஆண்­டில், 4.4 டிரில்­லி­யன் டாலர் என்ற அள­வுக்கு உயர்ந்­துள்ளன.

எதிர்­பார்ப்பு :
அதா­வது, 12 ஆண்­டு­களில், 21சத­வீ­தம் அள­வுக்கு, ஒட்டு மொத்த கூட்டு வளர்ச்சி கண்­டுள்­ளது, இந்த ஈ.டி.எப்., முத­லீ­டு­கள். இன்­றைய சூழ­லில், உலக முத­லீட்டு தொழி­லையே விழுங்­கி­வி­டும் அள­வுக்கு, ஈ.டி.எப்., நிதி­கள் வளர்ந்து வரு­கின்றன. நிதி மேலாண்மை தொழில், இந்த, ஈ.டி.எப்.,களின் அப­ரி­மி­த­மான வளர்ச்­சியை ஏற்க வேண்­டிய கட்­டா­யத்­துக்கு ஆளா­கி­யுள்­ளது.

இதற்கு, பல கார­ணங்­கள் உள்ளன. முக்­கிய கார­ணங்­க­ளாக சொல்ல வேண்­டி­யவை, அவற்­றின் எளி­மை­யும், வெளிப்­ப­டைத் தன்­மை­யும், நிர்­வா­கச் செல­வு­களும் ஆகும்.இந்­தி­யா­வி­லும், ஈ.டி.எப்., வளர்ந்து வரும் ஒரு முத­லீட்டு முறை­யா­கவே இருக்­கிறது. ஆனா­லும், இன்­றைய சூழ­லில், மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­க­ளோடு ஒப்­பி­டும் அள­வுக்கு, ஈ.டி.எப்., வளர்ச்சி தற்­போது இல்லை. ஆனால், வருங்­கா­லத்­தில், அவற்­றின் வளர்ச்சி, மியூச்­சு­வல் பண்­டை­யும் விஞ்­சும் என்­பதே எதிர்­பார்ப்பு.

இதன் வெளிப்­பா­டா­கவே, மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­களே முன்­வந்து, இந்த வகை முத­லீ­டு­களின் விற்­ப­னையை துவங்கி உள்ளன. அர­சின் பங்­கை­யும் இதில் குறிப்­பிட வேண்­டும். அர­சின் பங்கு விற்­பனை திட்­டங்­களில், இரண்டு ஆண்­டு­ க­ளாக, ஈ.டி.எப்., முறையை பயன்­ப­டுத்தி வெற்­றி­யும் கண்­டுள்­ளோம். சி.பி.எஸ்.இ., என்று அரசு விற்­பனை செய்த, ஈ.டி.எப்., பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ளது அனை­வ­ரும் அறிந்­ததே. தொடர்ந்து பல, ஈ.டி.எப்., திட்­டங்­களை கொண்­டு­வர அரசு ஆர்­வம் காட்­டு­கிறது. இந்த முயற்­சி­களின் தொடர் வெற்­றி­யில், யாருக்­கும் சந்­தே­க­மில்லை.

நம்­பிக்­கை :
நாளைய சூழ­லில், அரசு நிறு­வன மதிப்பு கூடும்­பட்­சத்­தில், அதன் பலன்­கள், இந்த ஈ.டி.எப்., திட்­டத்­தில் முத­லீடு செய்­யும் சிறு முத­லீட்­டா­ளர்­களை சேர வேண்­டும் என்­பதே அர­சின் நோக்­கம். உரு­வா­கும் சீர்­தி­ருத்த மாற்­றங்­களின் பலன்­கள், நாட்­டின் முத­லீட்டு கலா­சா­ரத்­தை­யும் வளர்க்­கும் வகை­யில் அமை­யும் என்­கிற நம்­பிக்­கை­யும் இதில் அடக்­கம்.

ஆனா­லும், இந்த முத­லீட்டு முறையை பற்­றிய பேச்­சும், புரி­த­லும் உரிய அளவு மக்­களை சென்­ற­டை­ய­வில்லை. மியூச்­சு­வல் பண்­டின் அள­வுக்கு, ஈ.டி.எப்., வளர்ச்சி காணும் சூழல் உரு­வாக வேண்­டும். அதற்­கான அடித்­தள பணி­கள் மட்­டுமே இப்­பொது நடந்து வரு­கின்றன. இனி வரும் காலங்­களில், ஈ.டி.எப்., முத­லீ­டு­கள், சேமிப்­பின் முக்­கிய அங்­க­மாக மாறும் என்­ப­தில் சிறி­தும் சந்­தே­க­மில்லை.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)