பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:04
மருத்துவ காப்பீட்டுத்துறையில் எளிமையான திட்டங்கள் தேவை என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர், சுபாஷ்சந்திர குந்தியா கூறியுள்ளார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய மருத்துவ காப்பீடு துறை தொடர்பான மாநாட்டில் பேசிய, சுபாஷ்சந்திர குந்தியா கூறியதாவது:
ரிஸ்க் அம்சம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாதது, மருத்துவ காப்பீடு திட்டங்கள் விலை அதிகமாக இருப்பது ஆகிய அம்சங்கள், மருத்து காப்பீடு போதிய அளவு வளர்ச்சி பெறாததற்கு காரணம். எனினும் உயர் வருமான பிரிவில் அதிக வளர்ச்சி இருக்கிறது.
மருத்துவ காப்பீடு திட்டங்கள் பரவலாக சாமானிய மக்கள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையான திட்டங்கள் தேவை. திட்டங்கள் பாலிசிதாரர்களால் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|