சுங்க கட்டணம் ஐ.சி.ஐ.சி.ஐ., இலக்குசுங்க கட்டணம் ஐ.சி.ஐ.சி.ஐ., இலக்கு ... தொடர்ந்து சரியும் ஏலக்காய் விலை தொடர்ந்து சரியும் ஏலக்காய் விலை ...
வெளி மாநில பட்டாசு ஆர்டர்கள் வரல... தவிப்பில் சிவகாசி ஆலை உரிமையாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2018
01:50

விரு­து­ந­கர்:பட்­டா­சுக்கு தடை கோரிய வழக்கு முடி­வுக்கு வரா­த­தால், வட மாநில வியா­பா­ரி­கள் ஆர்­டர்­கள் கொடுக்க தயக்­கம் காட்­டும் நிலை தொடர்­கிறது. இத­னால், சிவ­காசி பட்­டாசு ஆலை உரி­மை­யா­ளர்­கள் பாதிப்­பு­களை சந்­திக்­கின்­ற­னர்.
விரு­து­ந­கர் மாவட்­டத்­தில், சிவ­காசி மற்­றும் அதை சுற்­றிய பகு­தி­களில், 1923-ம் ஆண்டு முதல், பட்­டாசு உற்­பத்தி நடந்து வரு­கிறது. தற்­போது, 911 பட்­டாசு ஆலை­கள் செயல்­ப­டு­கின்­றன. நேர­டி­யாக மூன்று லட்­சம் சார்பு தொழில்­கள் மூலம், 8 லட்­சம் பேர் பயன் பெறு­கின்­ற­னர். பட்­டா­சால் மாசு என்ற கார­ணம் காட்டி, நாடு முழு­வ­தும் பட்­டாசு தயா­ரிப்­ப­தற்­கும், விற்­ப­தற்­கும், வெடிப்­ப­தற்­கும் தடை விதிக்க வேண்­டும் என்ற வழக்கு உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது.

இன்று, இவ்­வ­ழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வர உள்­ளது. இந்த வழக்கு முடிவு பெறா­மல் நீண்டு கொண்டே செல்­வ­தால், வட­மா­நில வியா­பா­ரி­கள் ஆர்­டர்­கள் கொடுக்க தயக்­கம் காட்டி வரு­கின்­ற­னர்.தீபா­வ­ளிக்கு, 3 மாதங்­கள் கூட இல்­லாத நிலை­யில், பட்­டாசு ஆர்­டர்­கள் முழு­மை­யாக கிடைக்­க­வில்லை. இத­னால், பெரும்­பா­லான ஆலை­களில் உற்­பத்தி குறைந்­துள்­ளது.
தொழி­லா­ளர்­க­ளுக்­கும் வேலை கொடுக்க முடி­யா­மல் உரி­மை­யா­ளர்­கள் தவிக்­கின்­ற­னர். வழக்கை விரைந்து நடத்தி, விரை­வில் நல்ல முடிவு கிடைக்க வேண்­டும், என்­பது பட்­டாசு தொழில் சார்ந்­த­வர்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும்.
சுதேசி தொழில்
வழக்­கின் தீர்ப்பு, பட்­டாசு உற்­பத்­தி­யா­ளர்க­ளுக்கு எதி­ராக இருந்­தால், பட்­டாசு தொழில் அடி­யோடு முடங்கி விடும். கடந்த ஆண்டு, டெல்லி மற்­றும் பட்­டாசு விற்­ப­னை­யின் மிகப்­பெ­ரிய சந்­தை­யா­கத் திக­ழும் வட இந்­தி­யா­வின் ஐந்து மாநி­லங்­களில், தீபா­வ­ளி­யில் பட்­டாசு வெடிக்க தடை விதிக்­கப்­பட்­ட­தால், சிவ­கா­சி­யில் பட்­டாசு தொழில் முடங்­கி­யது. இம்­மு­றை­யும் பெரும்­பா­லான வியா­பா­ரி­கள் ஆர்­டர் கொடுக்­க­வில்லை. உற்­பத்தி கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. தொழி­லா­ளர் நலன் கருதி, சுதேசி தொழில் என முறைப்­ப­டுத்­தி­னால், பிரச்­னை­யின்றி தொழிலை தொடர முடி­யும் என, கருத்து தெரி­வித்­துள்­ளார்,
’டிப்மா’ சங்­கத்­தின் இணைச் செய­லர் ராஜப்­பன்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)