பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:09
நாமக்கல்:வடமாநிலங்களில், ‘ஸ்ராவன்’ விரதம் கடைப்பிடிப்பதால் நுகர்வு கடுமையாக சரிந்து, பண்ணைகளில், முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
ஜூலை, 1ல், 440; 9ல், 445; 12, 450; 14ல், 455; 16ல், 460; 19ல், 465; 21ல், 470; 24ல், 475; 26ல், 480 என, படிப்படியாக உயர்ந்த கொள்முதல் விலை, 30ல், 10, ஆக., 2ல், 20, 4ல், 30 என, சரிந்து, 420 காசாக நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 6ல், 30 காசு, நேற்று முன்தினம், 20 காசு குறைக்கப்பட்டு, கொள்முதல் விலை, 370 காசாக நிர்ணயிக்கப்பட்டது. இது, மேலும் குறைய வாய்ப்புள்ளதால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு முட்டை பண்ணையாளர்கள் நலச்சங்கத் தலைவர் சின்ராஜ் கூறியதாவது:லாரிகள் ஸ்டிரைக்கால், பண்ணைகளில், ஏழு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதன் மூலம், பண்ணையாளர்களுக்கு தினமும், 28 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, வடமாநிலங்களில், ‘ஸ்ராவன்’ விரதம் கடைப்பிடிப்பதால், நுகர்வு சரிந்து, முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில், விற்பனை போக மீதமுள்ள முட்டைகளை, குளிர்பதன கிடங்கில் வைத்துவிடுவர். 10 நாட்களில் இச்சூழ்நிலை சீராகி, முட்டை கொள்முதல் விலை உயரும். விலை மேலும், 20 காசு குறைய வாய்ப்புஉள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|