தொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்புதொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்பு ... மின் துறை நிலக்கரி இறக்குமதி குறைந்தது மின் துறை நிலக்கரி இறக்குமதி குறைந்தது ...
சி.டி.எம்.ஏ., சேவை: பி.எஸ்.என்.எல்., ‘கட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
00:13

சி.டி.எம்.ஏ., தொழில்­நுட்ப மொபைல் சேவையை, செப்., 5 முதல் நிறுத்த, அனைத்து வட்­டங்­க­ளுக்­கும், பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம் உத்தர­விட்­டுள்­ளது.

தொலை தொடர்பு துறை­யில் ஆரம்ப கால­கட்­டத்­தில், சி.டி.எம்.ஏ., எனும், ‘கோடு டிவி­ஷன் மல்­டி­பிள் ஆக்­சிஸ்’ தொழில்­நுட்ப மொபைல் சேவை செயல்­பாட்­டுக்கு வந்­தது. பி.எஸ். என்.எல்., நிறு­வ­ன­மும், தனி­யார் துறை­யில் ரிலை­யன்ஸ் நிறு­வ­ன­மும் இந்த சேவையை வழங்கி வந்­தன.

தற்­போது, ஜி.எஸ்.எம்., எனும், ‘குளோ­பல் சிஸ்­டம் பார் மொபைல் கம்­யூ­னி­கே­ஷன்’ தொழில்­நுட்­பம் நடை­மு­றை­யில் உள்­ளது. இந்த தொழில்­நுட்­பங்­க­ளையே, அனைத்து தொலை தொடர்பு நிறு­வ­னங்­களும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

சி.டி.எம்.ஏ., தொழில்­நுட்­பத்­தின் மூலம், குறிப்­பிட்ட தொலை துாரத்­துக்­குள் மட்­டுமே தொடர்பு கொள்ள முடி­யும். ஜி.எஸ்.எம்., தொழில்­நுட்­பத்­தில், சர்­வ­தேச அள­வில் தொடர்பு கொள்ள முடியும்.இந்­நி­லை­யில், சி.டி.எம்.ஏ., தொழில்­நுட்­பம் பழமை ஆகி­விட்­ட­தால், இந்த சேவையை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்­துள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:சி.டி.எம்.ஏ., தொழில்­நுட்­பம் இந்­தியா முழு­வ­தும், சென்னை, தமி­ழ­கம், கேரளா, ஆந்­திரா, தெலுங்­கானா, குஜ­ராத், மத்­திய பிர­தே­சம் உட்­பட, 19 தொலை தொடர்பு வட்­டங்­களில் செயல்­பாட்­டில் உள்­ளது.இந்த தொழில்­நுட்­பம் பழ­மை­யா­ன­தா­லும், இதில் அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் இல்­லாத கார­ணத்­தா­லும், இந்த குறிப்­பிட்ட சேவையை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ளது.

இந்த தொழில் நுட்பத்தை பயன்­ப­டுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்­பத்­துக்கு மாறும்படி கடி­தம் மூலம் அறி­வு­றுத்தி வரு­கி­றோம்.சென்­னை­யில், 2,600 சி.எம்.டி.ஏ., வாடிக்­கை­யா­ளர்­கள் மட்­டுமே உள்ள­னர்.இதே போன்று, தமிழக வட்­டத்­தி­லும் குறைந்த அளவு வாடிக்­கை­யா­ளர்­களே உள்­ள­னர்.

எனவே, இந்­தியா முழு­வ­தும் உள்ள அனைத்து வட்­டங்­க­ளி­லும், செப்., 5 முதல், சி.டி.எம்.ஏ., சேவையை நிறுத்­த­வும், புதிய சேவை வழங்க வேண்­டாம் என­வும்அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)