பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:19
திருப்பூர்:ஆடை, துணி என, 328 ஜவுளி பொருட்களுக்கான இறக்குமதி வரியை, இரண்டு மடங்கு உயர்த்தியிருப்பது, தமிழக ஜவுளித் துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், அதிகளவு வேலைவாய்ப்பு வழங்குவதிலும், ஜவுளித் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. பருத்தி பஞ்சு, நுால், ஆயத்த ஆடைகள் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிற நாடுகளில் இருந்தும், ஜவுளி சார்ந்த பொருட்கள் இறக்குமதியாகின்றன. விலை குறைந்த இறக்குமதி ஆடைகளால், உள்நாட்டு ஜவுளி உற்பத்தி துறையினருக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படுகிறது; வேலை வாய்ப்பும் குறைகிறது.
எனவே, உள்நாட்டு உற்பத்தி துறையை பாதுகாக்கும் வகையில், 328 வகையான ஜவுளி பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10ல் இருந்து, 20 சதவீதமாக, இரண்டு மடங்கு உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இது, தமிழக ஜவுளித் துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
திருப்பூர் ஆடிட்டர் தனஞ்ஜெயன் கூறியதாவது:விலை குறைவாக விற்பனை செய்யப்படும் பிற நாட்டு ஜவுளி பொருட்களால், உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர் வேலை இழப்பும் ஏற்படுகிறது.
இறக்குமதி வரியை இரு மடங்கு உயர்த்தி,உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையை மத்திய அரசு பாதுகாத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:வங்கதேசத்துக்கு சலுகை வழங்கியுள்ளதால், ஆடைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது சிரமம்.பிற நாடுகளைப் போல், ‘சோர்ஸிங் ரெஸ்ட்ரிக் ஷன்’ என்கிற முறையை பின்பற்றலாம். இதனால், வங்கதேசத்திலிருந்து அபரி மிதமாக ஆடை இறக்குமதியாவது கட்டுப்படுவதோடு, நம் உள்நாட்டு உற்பத்தி துறையும் பயன் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|