பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:16
புதுடில்லி:கடந்த, ஜூலை மாதம், நாட்டின் தங்கம் இறக்குமதி, 75 டன்னாக அதிகரித்துள்ளது.தங்கம் இறக்குமதி, தொடர்ந்து, ஏழு மாதங்களாக குறைந்து வந்தது. இந்நிலையில், 2017, ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, இந்தாண்டு, ஜூலையில், 44.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனத்தின் பகுப்பாய்வாளர், கேமரான் அலெக்சாண்டர் கூறியதாவது:தங்க நகை வியாபாரிகள், தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் மாதம் இறக்குமதி செய்வதை தவிர்த்தனர்.இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரம், மும்பையில், சர்வதேச நகை கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு, தங்கத்திற்கான தேவைப்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக, ஜூலையில், அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.அதற்கேற்ப, கடந்த மாதம், சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறைவாக இருந்தது. இதுதான் சரியான தருணம் என, தங்க நகை வியாபாரிகள், அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து, இருப்பு வைத்தனர்.
தங்கம் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இது, ரூபாய் வெளிமதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, திங்களன்று, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 69.89 ஆக, புதிய சரிவைத் தொட்டது.அதேசமயம், சர்வதேச சந்தையில், தங்கம் விலை, 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது.இதன் காரணமாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 71 வரை சரியும் என்ற ஊகத்தினாலும், வியாபாரிகள், அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|