பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:17
நாமக்கல்:‘தென் மேற்கு பருவமழை தீவிரம், ஆடி மாதம் முடிவு போன்ற காரணங்களால், தமிழக முட்டை விற்பனை சிறப்பாக உள்ளது.‘அதனால், பண்ணையாளர்கள், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்டை விற்பனை செய்ய வேண்டாம்’ என, நெக் தலைவர் செல்வராஜ் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) கொள்முதல் விலை நிர்ணயம் செய்கிறது.
ஜூலை, 1ல், 440 காசாக, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த, 9ல், கொள்முதல் விலை, 370 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.கடந்த, 11 நாட்களில், கொள்முதல் விலை, 110 காசு சரிந்துள்ளது, பண்ணையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையில், நெக் நிர்ணயிக்கும் விலையில் இருந்து, 50 முதல், 60 காசு குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், உற்பத்தி செலவுக்கே கட்டுபடியாகாமல், பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலை நீடித்து வருகிறது.
அதனால், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஐதராபாத், பர்வாலா, ஹோஸ்பேட் உள்ளிட்ட உற்பத்தி மையங்களில், லோடிங் ரேட் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டால், இனி கண்டிப்பாக விலை ஏறும் சூழல் உள்ளது.அதன் தொடர்ச்சியாக, ஹோஸ்பேட், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில், முட்டை விலை, இரண்டு காசு உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை, முட்டைக்கான தேவை நன்றாகவே உள்ளது.
மேலும், முட்டை இருப்பும் இல்லை. தென் மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளது உள்ளிட்ட காரணங்களால், கேரளா முட்டை விற்பனை மேலும் அதிகரிக்கும். ஆடி மாதம் முடிவடையும் சூழல் உள்ளதால், தமிழக விற்பனை சிறப்பாக உள்ளது.அதனால், முட்டை விலை ஏறும் சூழ்நிலையே உள்ளதால், பண்ணையாளர்கள், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்டை விற்பனை செய்ய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|