பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:10
புதுடில்லி:‘‘ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவை சமாளிக்கும் அளவிற்கு, தேவையான அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது,’’ என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
நேற்று முன்தினம், அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் நடுவே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 70 ரூபாயை தாண்டி, 70.10 வரை வீழ்ச்சி கண்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டு, நிலைமையை சமாளித்தது.அதனால், ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இறுதியில், 69.90 ஆக முன்னேற்றம் கண்டது.
இது குறித்து, அருண்ஜெட்லி, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:துருக்கியின் பொருளாதார பிரச்னை, உலக நாடுகளின் கரன்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.ரூபாய் மதிப்பின் சரிவை சமாளிக்கும் அளவிற்கு, ரிசர்வ் வங்கியிடம், அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது.நம் நாட்டின் பொருளாதார அடித்தளம், வலுவாக, எந்த இடர்ப்பாடுகளையும் சமாளித்து, எழுந்து நிற்கும் ஆற்றலுடன் விளங்குகிறது.
சர்வதேச நிலவரங்களால், ரூபாய் மதிப்பில் ஏற்ற, இறக்கம் உள்ளது. அதை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறதுஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆக., 3 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியிடம், 40,270 கோடி டாலர் அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|