பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:21
சென்னை : எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னையில் தன், புதிய மண்டலத்தை நேற்று துவக்கியது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியக் காப்பீட்டு துறையில், எஸ்.பி.ஐ., முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில், சென்னையில் தன் நிறுவனத்தை பலப்படுத்தும் நோக்கில், கோடம்பாக்கத்தில், புதிய மண்டலத்தை, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நேற்று துவக்கியது.
தமிழகத்தில், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்சின் வெற்றிக்கு, ‘தேவை அடிப்படையிலான விற்பனை’ என்ற வழியில் வாடிக்கையாளர்களை அணுகுவதே முக்கிய காரணமாகும். இதனால், சென்னையில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறோம்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.பி.ஐ., லைப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சீவ் நவ்ட்டியால், சென்னை மண்டல தலைமை பொது மேலாளர், வினய் தென்சே உட்பட, பலர் பங்கேற்றார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|