பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:22
கவுஹாத்தி : கடந்த, 2017 -– 18ம் வரி மதிப்பீட்டு ஆண்டில், நாட்டின் வருமான வரி வசூல், 10.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி கூறியதாவது: கடந்த, வரி மதிப்பீட்டு ஆண்டில், சாதனை அளவாக, 6.92 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, 2016 -– 17ல் தாக்கல் செய்யப்பட்ட, 5.61 கோடி பேருடன் ஒப்பிடும்போது, 1.31 கோடி அதிகம். புதிதாக, 1.06 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதை, நடப்பு வரி மதிப்பீட்டு ஆண்டில், 1.25 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பிராந்தியத்தில், புதிதாக, 1.89 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்; வருமான வரி வசூல், 16.7 சதவீதம் உயர்ந்து, 6,082 கோடி ரூபாயில் இருந்து, 7,097 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் வரம்பை அதிகரிக்கவும், வரி வசூல் இலக்கை உயர்த்தவும், வரி செலுத்துவோருக்கு, மேம்பட்ட சேவைகளை வழங்கவும், வருமான வரி துறை உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|