பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:23
புதுடில்லி : முன்னாள் பிரதமர், வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், 22ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதனால், பிரதமர் மோடி, 21ம் தேதி துவக்கி வைப்பதாக இருந்த, ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்’ சேவை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலம் முழுமையான வங்கிச் சேவையில் களமிறங்க உள்ளது.
முதற்கட்டமாக, 650 அஞ்சல் அலுவலகங்களிலும், இந்தாண்டு இறுதிக்குள், 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில், சேவை விரிவுபடுத்தப்படும். இதில், கிராமப்புறங்களில், 1.30 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. அதனால், சிறிய கிராமத்தில் உள்ளோருக்கும், வங்கிச் சேவை கிடைக்கும் சூழல் உருவாகும். இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகளை மட்டுமே ஏற்க முடியும். மேலும், கடன்கள் அல்லது ‘கிரெடிட் கார்டு’ ஆகியவற்றை வழங்க முடியாது. அதனால், கடன் வழங்குவதற்காக, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
காப்பீட்டு திட்டங்களை வினியோகிக்க, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன், கூட்டு சேர்ந்துள்ளது. இத்துடன், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கும், பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|