பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:46
பெங்களூரு : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் இலகு ரக வர்த்தக வாகனமான, ‘சூப்பர் கேரி’ விற்பனையை இரட்டிப்பாக்க, இலக்கு வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த செயல் இயக்குனர், ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது: இலகு ரக வர்த்தக வாகனத்தை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், நிறுவனம், 10 ஆயிரம் சூப்பர் கேரி வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. நடப்பு நிதியாண்டில், விற்பனையை இரட்டிப்பாக்க, அதாவது, 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலகு ரக வர்த்தக வாகன பிரிவில், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களுக்கு போட்டியாக, 2016ல், சூப்பர் கேரியை அறிமுகம் செய்தது, மாருதி சுசூகி. 2016 – -17ம் நிதியாண்டில், 900 சூப்பர் கேரி வாகனங்கள் விற்பனை ஆகின. உள்நாட்டு விற்பனை தவிர, தென் ஆப்ரிக்கா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும், சூப்பர் கேரி வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|