பொது நிறுவன பங்குகள் திரும்ப பெறும் திட்டம்  மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்பொது நிறுவன பங்குகள் திரும்ப பெறும் திட்டம் மத்திய நிதியமைச்சகம் ... ... இயந்திர இறக்குமதிக்கு இனி ஐ.ஜி.எஸ்.டி., வரி இயந்திர இறக்குமதிக்கு இனி ஐ.ஜி.எஸ்.டி., வரி ...
‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:40

பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார்.


ஆங்­கில பேரா­சி­ரி­யர்

இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது.
ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன், வலை­தளத்தில், பொருட்­களை வாங்கி, விற்­கும் சிறிய நிறு­வ­னத்தை துவக்­கி­னார்.


அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யில், 1999ல், அமெ­ரிக்க துணி­கர முத­லீட்டு நிறு­வ­னம் ஒன்று, 60 ஆயிரம் டாலர் நிதி­யு­தவி அளித்­தது.இதை­ய­டுத்து, ஜாக் மா, நண்­பர்­கள் சில­ரு­டன் இணைந்து, ‘அலி­பாபா’ என்ற வலை­தள சந்தை நிறு­வ­னத்தை துவக்கி­னார்.அதில் இருந்து அவர் வாழ்க்­கையே மாறி­யது. இன்று, உல­கில் பெரும் வெற்றி பெற்ற சில நிறு­வ­னங்­க­ளுள் ஒன்­றாக, 42,088 கோடி டாலர்மதிப்­பு­டன், அலி­பாபா விளங்­கு­கிறது.


ஜாக் மாவின் சொத்து மதிப்பு, 3,660 கோடி டாலர், அதா­வது, 2.56 லட்­சம் கோடி ரூபாய்.ரிலை­யன்ஸ் தலை­வர் முகேஷ் அம்­பா­னிக்கு முன், ஆசி­யா­வின்,‘நம்­பர் – 1’ பணக்­கா­ரர் என்ற பெரு­மை­யும், ஜாக் மாவுக்கு கிடைத்­தது.


கல்வி


‘வெளிப்­ப­டைத் தன்மை, துணிச்­ச­லான முயற்சி, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களில் உள்ள ஆர்­வம் ஆகி­யவை தான், ஜாக் மாவின் வெற்­றிக்கு கார­ணம்’ என, அவர் நண்பர்கள் கூறு­கின்­ற­னர்.
‘‘ஒரு­வர், சம்­பா­தித்த பணம் அவ­ருக்கு மட்­டு­மின்றி, சமு­தா­யத்­திற்­கும் பயன்­பட வேண்­டும்,’’ எனக் கூறும் ஜாக் மா,ஓய்­வுக்கு பின், கல்விமுன்­னேற்­றத்­திற்கு பாடு­பட திட்­ட­மிட்­டுள்­ளார்.

உள்­ளு­ணர்வு


முதன் முத­லாக, இணை­யம் பயன்­ப­டுத்­திய போதும், விசைப்­ப­ல­கையை தொட்­ட­போ­தும், அவற்­றில், உல­கையே மாற்­றக் கூடிய ஏதோ ஒரு சக்தி இருப்­ப­தாக, என் உள்­ளு­ணர்வு கூறி­யது.

ஜாக் மா, நிறு­வ­னர், அலி­பாபா டாட் காம்


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)