பதிவு செய்த நாள்
09 செப்2018
00:40
பீஜிங்:வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘அலிபாபா டாட் காம்’ நிறுவனத்தை நிறுவிய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆங்கில பேராசிரியர்
இவர், சீனாவில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, 20 ஆண்டுகளில், ‘நம்பர் – 1’ பணக்காரராக உயர்ந்தவர். இவரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்வூதியத்தில், குடும்பத்தை நடத்தியவர்.ஹங்சோ ஆசிரியர் கல்லுாரியில் பட்டக் கல்வி முடித்து, ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணையத்தின் அறிமுகம், புதிய வாசலை திறந்தது.
ஆசிரியர் பணியைஉதறி, பின் தன் வீட்டிலேயே, ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன், வலைதளத்தில், பொருட்களை வாங்கி, விற்கும் சிறிய நிறுவனத்தை துவக்கினார்.
அவர் மீதுள்ள நம்பிக்கையில், 1999ல், அமெரிக்க துணிகர முதலீட்டு நிறுவனம் ஒன்று, 60 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தது.இதையடுத்து, ஜாக் மா, நண்பர்கள் சிலருடன் இணைந்து, ‘அலிபாபா’ என்ற வலைதள சந்தை நிறுவனத்தை துவக்கினார்.அதில் இருந்து அவர் வாழ்க்கையே மாறியது. இன்று, உலகில் பெரும் வெற்றி பெற்ற சில நிறுவனங்களுள் ஒன்றாக, 42,088 கோடி டாலர்மதிப்புடன், அலிபாபா விளங்குகிறது.
ஜாக் மாவின் சொத்து மதிப்பு, 3,660 கோடி டாலர், அதாவது, 2.56 லட்சம் கோடி ரூபாய்.ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முன், ஆசியாவின்,‘நம்பர் – 1’ பணக்காரர் என்ற பெருமையும், ஜாக் மாவுக்கு கிடைத்தது.
கல்வி
‘வெளிப்படைத் தன்மை, துணிச்சலான முயற்சி, புதுமையான கண்டுபிடிப்புகளில் உள்ள ஆர்வம் ஆகியவை தான், ஜாக் மாவின் வெற்றிக்கு காரணம்’ என, அவர் நண்பர்கள் கூறுகின்றனர்.
‘‘ஒருவர், சம்பாதித்த பணம் அவருக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும்,’’ எனக் கூறும் ஜாக் மா,ஓய்வுக்கு பின், கல்விமுன்னேற்றத்திற்கு பாடுபட திட்டமிட்டுள்ளார்.
உள்ளுணர்வு
முதன் முதலாக, இணையம் பயன்படுத்திய போதும், விசைப்பலகையை தொட்டபோதும், அவற்றில், உலகையே மாற்றக் கூடிய ஏதோ ஒரு சக்தி இருப்பதாக, என் உள்ளுணர்வு கூறியது.
ஜாக் மா, நிறுவனர், அலிபாபா டாட் காம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|