கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ... வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்? வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்? ...
முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
01:02

மதிப்­பு­சார் முத­லீடு, வளர்ச்சி சார்ந்த முத­லீ­டாக உரு­மா­றிய காலக்­கட்­டம், வர­லாற்று முக்­கி­யத்­து­வம் கொண்­டது.


ஒரு கால­கட்­டத்­தில், சொத்­து­க­ளின் மதிப்­பீ­டு­கள், பங்­குச் சந்­தை­யில் மிக­வும் உயர்ந்து விட்ட நிலை­யில், மதிப்­பு­சார் முத­லீட்­டின் அள­வீ­டு­களும், வழி­மு­றை­களும் செய­லி­ழக்க துவங்­கின. அவற்றை பயன்­ப­டுத்தி முத­லீட்டு தேர்­வு­களை செய்ய முடி­யாத நிலைக்கு, வல்­லு­னர்­களே தள்­ளப்­பட்­ட­னர்.


இந்­நி­லை­யில், புதிய சிந்­த­னை­கள் தேவைப்­பட்­டன. அவை மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தத்தை, அடுத்த கட்­டத்­திற்கு எடுத்­துச் செல்­லும் வகை­யில் இருக்க வேண்­டிய அவ­சி­யத்தை, துறை­சார் வல்­லு­னர்­கள் உணர்ந்­த­னர்.ஆனால், இதற்­கான தீர்வை பிர­ப­லப்­ப­டுத்­தி­யது, முத­லீட்டு துறை­யில் வெற்றி கண்ட, பபட்­டும், சார்லி முங்­க­ரும் தான். உள்­ள­டக்க மதிப்பு – ‘இன்ட்­ரின்­சிக் வேல்யூ’ என்ற புதிய குறி­யீட்டை, இவர்­கள் இரு­வ­ரும், மதிப்­பு­சார் முத­லீட்டு சிந்­த­னைக்­குள் நுழைத்­த­னர்.


காலப்­போக்­கில், ஒரு நிறு­வ­னத்­தின் உள்­ள­டக்க மதிப்பு, அனைத்து முத­லீட்­டா­ளர்­க­ளின் கணக்­கீ­டு­க­ளி­லும் முக்­கிய அங்­க­மா­னது.


உள்­ள­டக்க மதிப்­பீடு என்­றால் என்ன?


ஒரு நிறு­வ­னம் பெற்­றி­ருக்­கும் நன்­ம­திப்பு, எதிர்­கா­லத்­தி­லும் அதற்கு லாப பெருக்­கம் தரும் என்­பதே இதன் அடிப்­படை. அந்த நன்­ம­திப்பு, தொடர்ந்து நிறு­வன வரு­வாய் வளர்ச்­சிக்­கும், லாப பெருக்­கத்­திற்­கும் வழி செய்­யும் தன்மை உடை­யது.இந்த வளர்ச்சி எந்த அளவு இருக்­கு­மென்­பது, பல தொழில்­களில் எளி­தில் யூகிக்­கக்­கூ­டி­யது. அப்­படி யூகிக்க உகந்த தொழில்­கள், நுகர்­பொ­ருட்­கள் விற்­ப­னை­யில் அதி­கம் காணப்­ப­டக் கூடும்.


இந்த நிறு­வ­னங்­க­ளின்வரு­வாய் மற்­றும் லாப வளர்ச்­சியை நம்­மால் யூகித்து, எதிர்­கால
லாபத்­தின் இன்­றைய மதிப்பை, எளி­தில் அள­விட முடி­யும்.வரும் ஆண்­டு­க­ளின் லாப கணக்கை போட்டு, அதன் ஒட்­டு­மொத்த மதிப்பை கண்­டெ­டுத்து, அந்த தொகை­யின் இன்­றைய மதிப்பை, அள­வி­டு­வதே இந்த வழி­முறை.அப்­படி கண்­டெ­டுக்­கும் மதிப்பை, ‘உள்­ள­டக்க மதிப்பு’ என, பபட், -முங்­கர்பெய­ரிட்­ட­னர். இந்த மதிப்பு, நிறு­வ­னத்­தின் எதிர்­கா­லத்தை நன்­றாக பிர­தி­ப­லிக்­கும் என்­பதே, அவர்­க­ளின் வாதம்.


சொத்து மதிப்பு சார்ந்த, மதிப்­பு சார் முத­லீட்டு சிந்­தனை, லாப வளர்ச்சி சார்ந்து மாற்­றம் கண்ட தரு­ணம் மிக முக்­கி­ய­மா­னது.மாறும் சூழ­லுக்கு ஏற்ப, சித்­தாந்­தங்­கள் தம்மை மாற்­றிக் கொள்­வதே, அவற்­றின் வாழ்­நாளை கூட்­டும். அந்த வகை­யில், இந்த மாற்­றம் மிக முக்­கி­ய­மா­னது.
இதன் தாக்­கம் காலப் போக்­கில் வலு­வ­டைந்து, இந்த துறை­யின் வளர்ச்­சிக்கு வழி­வ­குத்­தது.
ஒரு நிறு­வ­னத்­தின் மதிப்பு, எப்­போ­தெல்­லாம் உள்­ள­டக்க மதிப்பை விட மிகக் குறை­வாக உள்­ளதோ, அப்­போ­தெல்­லாம், அதன் பங்­கு­களை வாங்க வேண்­டிய அவ­சி­யத்தை நாம் தெளி­வாக புரிந்­து­கொள்ள வேண்­டும்.


ஆகவே, மதிப்பை தெளி­வாக கணக்­கிட்டு, அந்த கணக்­கிற்­குள் வரக்­கூ­டிய தவ­று­க­ளை­யும் சேர்த்து அள­விட்டு, அதன்­பின் வரும் மதிப்­பீட்டை, நிறு­வ­னத்­தின் உள்­ள­டக்க மதிப்­பாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.ஒரு நிறு­வ­னத்­தின் மதிப்பு, முத­லீட்­டிற்கு சாத­க­மாக வரும் வரை காத்­தி­ருப்­பது அவ­சி­யம். தொடர்ந்து அதை கவ­னித்து, தக்க மதிப்­பீட்­டில் முத­லீடு செய்­வதே, நம் முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி­வ­குக்­கும்.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)