பதிவு செய்த நாள்
12 செப்2018
00:27
மும்பை:நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு, 72.73 ஆக வீழ்ச்சி கண்டது.
அன்னியச்
செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை
விட, 20 காசுகள் உயர்ந்து, 72.25 ஆக ஏற்றம் கண்டது. பிற்பகலில், ஒரு
பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 78 டாலராக உயர்ந்ததை அடுத்து,
டாலருக்கான தேவை அதிகரித்தது. இதனால், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை
விட, 28 காசுகள் குறைந்து, 72.73ல் நிலை கொண்டது.
நேற்று, பங்குச் சந்தைகளும் சரிவைக் கண்டன. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தன.இதனால்,
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 509.04
புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 37,423.13 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய
பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 150.60 புள்ளிகள் சரிந்து,
11,287.50 புள்ளிகளில் நிலை பெற்றது.
பங்குச் சந்தை சரிவால், கடந்த இரண்டு நாட்களில், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு, 4 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|