பதிவு செய்த நாள்
13 செப்2018
00:15
குன்னுார்:குன்னுாரில், இரண்டாம் சீசனுக்காக, ௧.௫ டன் பேரி ஜாம் தயாரிக்கும் பணி, துரித
கதியில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உட்பட, பல்வேறு வகை பழங்கள் விளைகின்றன. இதனால், மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழப் பண்ணை அமைக்கப்பட்டு, அங்குள்ள பழவியல் நிலையத்தில், ஜாம் மற்றும் பழச்சாறு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழப் பண்ணையில் விளைந்த 1.5டன் பேரியில், ஜாம் தயாரிக்கும் பணி
நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில், இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில், ஓரிரு நாட்களில் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜாம் பாட்டில், 300 கிராமுக்கு, 90 ரூபாய்; 500 கிராமுக்கு, 110 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 500 கிலோவுக்கும் குறைவாகவே ஜாம் தயாரித்த நிலையில், நடப்பாண்டு 1.5டன்
உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|