பதிவு செய்த நாள்
13 செப்2018
00:18
திருப்பூர்:திருப்பூர் எலாஸ்டிக் துறையினர் நேற்று, உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தியதால், 6 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி முடங்கியது.
திருப்பூரில்,
500க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
ரப்பர், பாலியெஸ்டர், நைலான் நுாலிழைகளை பயன்படுத்தி, அனைத்து வகை
உள்ளாடைகளுக்கான எலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது.கேரளாவில்
ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பாலியெஸ்டர், நைலான்
நுால், ரப்பர் விலை உயர்ந்துள்ளது. இதனால், எலாஸ்டிக் துறையினரின்
உற்பத்தி செலவினம், 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,
எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம்
சார்பில், நேற்று கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தால், 6 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு பகுதியாக, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
இது குறித்து, சங்கத் தலைவர், கோவிந்தசாமி கூறியதாவது:எலாஸ்டிக் துறை, ரப்பர், நுால் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்
சூழலை உணர்ந்து, ஆடை உற்பத்தி துறையினர், எலாஸ்டிக் விலை உயர்வை
அங்கீகரிக்க வேண்டும். ரப்பர், நுால் விலையை திடீரென உயர்த்துவதை
கைவிட வேண்டும்; மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில், மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|