பதிவு செய்த நாள்
14 செப்2018
00:50
புதுடில்லி:யோகா குருவான பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அடுத்த கட்டமாக, பசும் பால் விற்பனையை அறிமுகம் செய்கிறது.
பதஞ்சலி நிறுவனம், பசும் பாலை மட்டுமின்றி, தயிர், மோர், நெய் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய உள்ளது.இந்நிறுவனம்,
1 லிட்டர் பாலை, 40 ரூபாய்க்கு விற்க இருக்கிறது. மதர் டெய்ரி, அமுல்
ஆகிய நிறுவனங்கள், 1 லிட்டர் பாலை, 42 ரூபாய்க்கு விற்பனை செய்து
வரும் நிலையில், பதஞ்சலி நிறுவனம், 2 ரூபாய் குறைவாக விலை
நிர்ணயித்துள்ளது.
முதல் நாளில், 4 லட்சம் லிட்டர் பாலை
இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பாலை,
வினியோகம் செய்வதற்காக, 56 ஆயிரம் சில்லரை விற்பனையாளர்கள்
மற்றும் வணிகர்களிடம் கூட்டு வைத்துள்ளது.அடுத்த நிதியாண்டுக்குள், 10 லட்சம் லிட்டர் பசும் பாலை வினியோகம் செய்ய திட்டமிடுவதாக பதஞ்சலி தெரிவித்துள்ளது.
மேலும்,
1,000 கோடி ரூபாய் வருவாயை இத்தகைய கூடுதல் பொருட்கள் மூலம்
ஈட்டவும் திட்டமிட்டுள்ளது. பால் பொருட்கள் மூலம் நடப்பு
நிதியாண்டில், 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட இலக்கு
நிர்ணயித்துள்ளது.பால் மட்டுமின்றி, இயற்கை குடிநீர், மூலிகை குடிநீர் ஆகியவற்றையும் பதஞ்சலி அறிமுகம் செய்ய உள்ளது.அண்மையில்
இந்நிறுவனம், நுாடுல்ஸ் விற்பனையை அறிமுகம் செய்தது. அதன்
தொடர்ச்சியாக இப்போது, ’பிரெஞ்ச் பிரை’ நொறுக்கு தீனியையும்
அறிமுகம் செய்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|