பசும் பால் விற்பனையில் பதஞ்சலிபசும் பால் விற்பனையில் பதஞ்சலி ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.68 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.68 ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளி துறை நிலையான வளர்ச்சி காணும் ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
00:56

மும்பை:'நடப்பு நிதி­யாண்­டில், இந்­திய ஜவுளி துறை வளர்ச்சி, நிலை­யாக இருக்­கும்' என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, 'இந்­தியா ரேட்­டிங்ஸ்' தெரி­வித்­துள்­ளது.


இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், எஞ்­சிய ஏழு மாதங்­களில், ஜவுளி துறை வளர்ச்சி, நிலைத்­தி­ருக்­கும். குறிப்­பாக, பருத்தி மற்­றும் செயற்கை ஜவுளி பிரிவு வளர்ச்சி, ஸ்தி­ர­மாக இருக்­கும்.தனி­யார் துறை­யில் நுகர்வு அதி­க­ரித்து வரு­வ­தால், உள்­நாட்­டில், ஜவு­ளிக்­கான தேவை பெரு­கும். அது­போல, ஜவுளி ஏற்­று­ம­தி­யும் அதி­க­ரிக்­கும். குறிப்­பாக, ரூபாய் மதிப்பு சரி­வால், ஆயத்த ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் அதி­கம் பய­ன­டை­வர்.


ரூபாய் மதிப்பு


இந்­தாண்டு, ஏப்., – ஆகஸ்ட் வரை, அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, ஆயத்த ஆடை­களை ஏற்­று­மதி செய்­யும் பிற நாடு­களின் கரன்சி மதிப்பை விட, சரி­வ­டைந்­துள்­ளது.
இத­னால், அந்­நா­டு­களை விட, அதிக ஆதா­யம் கிடைக்­கும் இந்­திய ஜவு­ளி­களை
இறக்­கு­மதி செய்­யவே, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் விரும்­பும்.


இது, சர்­வ­தேச ஜவுளி சந்­தை­யில், இந்­திய ஜவு­ளி­க­ளுக்கு அதிக போட்­டியை ஏற்­ப­டுத்தி, அவற்­றின் ஏற்­று­மதி உயர வழி வகை செய்­யும்.உள்­நாட்­டில், ஜவு­ளி­க­ளுக்­கான தேவை உயர்ந்து வரு­கிறது. இத­னால்,மூலப் பொருட்­களின் கொள்­மு­தல் செல­வில் ஏற்­பட்­டுள்ள உயர்வை, விற்­பனை விலை­யில் ஈடு செய்­யும் வாய்ப்­பும், ஜவுளி துறைக்கு கிடைத்­துள்­ளது. இதன் கார­ண­மாக, ஜவுளி துறை­யின் லாப வரம்­பும் உய­ரும்.


இது, மூலப் பொருட்­கள் விலை உயர்வு, கடன் போன்­ற­வற்­றால், நடை­முறை மூல­த­னத் தேவையை சமா­ளிக்க திணறி வரும், ஜவுளி துறை­யி­ன­ருக்கு சாத­க­மான அம்­ச­மா­கும்.


பருத்தி


இம்­மா­தம் முடி­யும், 2017-–18ம் பருத்தி பரு­வத்­தில், எதிர்­பார்த்­ததை விட, பருத்தி உற்­பத்தி குறை­யும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பருத்தி பயிர் பரப்பு குறை­வால், வரும் பரு­வத்­தி­லும் அதன் உற்­பத்தி குறைய வாய்ப்­புள்­ளது.அதே­ச­ம­யம், உள்­நாட்­டில், பருத்தி தேவை அதி­க­மாக இருக்­கும். சீனா­விற்கு அதிக அள­வில் பருத்தி ஏற்­று­ம­தி­யா­கும். இதன் கார­ண­மாக, பருத்தி
கையி­ருப்பு குறை­யும்.


இந்­நி­லை­யில், நடப்பு, 2018-–19ம் பருத்தி பரு­வத்­திற்­கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்­தப்­படும் என்­ப­தால், பருத்தி விலை உய­ரும். இதன் கார­ண­மாக, செயற்கை நுாலிழை ஜவுளி வகை­கள் விற்­பனை அதி­க­ரித்து, அப்­பி­ரி­வின் லாப வரம்பு கூடும்.


செயற்கை நுாலிழை ஜவுளி உற்­பத்­திக்கு, 7 சத­வீத உள்­ளீட்டு வரிப் பயன் அளிக்­கும் அரசு திட்­ட­மும் முடி­வும், இத்­து­றைக்கு சாத­க­மாக இருக்­கும். இத­னால், ஆயத்த ஆடை உற்­பத்­தி­யா­ளர்­களின் மூலப்­பொ­ருட்­கள் செல­வி­னம் குறைந்து, அவர்­கள் அதிக அள­வில் உற்­பத்தி மேற்­கொள்ள முடி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


ஏறு­மு­கம்


கடந்த ஜூலை­யில், நாட்­டின் ஒட்­டு­மொத்த ஜவுளி ஏற்­று­மதி, 15 சத­வீ­தம் அதி­க­ரித்து, 10,879 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 9,429 கோடி ரூபா­யாக
இருந்­தது.இதே காலத்­தில், ஆயத்த ஆடை­கள் ஏற்­று­மதி, 6 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 8,263 கோடி­யில் இருந்து, 8,757 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)