தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம் குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம் ...
அதிக வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் புது திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
17:21

சென்னை : ஏர்டெல் நிறுவனம் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. முதன்முதலாக 4ஜி சேவையை நம் நாட்டில் அறிமுகம் செய்ததும் இந்த நிறுவனம் தான்.

இந்தியாவில் இணையதள வசதியுடன் கூடிய மொபைல் போன்களின் பயன்பாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஏர்டெல்லுக்கு 2.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாநிலத்திலும் நம்பர் - 1-ஆக இந்த நிறுவனம் திகழ்கிறது. இதற்கு இளைஞர்கள் தான் காரணம். அவர்களுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் வாடிக்கையாளர்களின் மனதை கவரவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்த ஏர்டெல் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

’புராஜெக்ட் லீப்’ என பெயிரிடப்பட்டுள்ள இத்திட்டம், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட இருக்கிறது. எதிர்கால தேவைகளையும், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும், தங்கள் நிறுவனத்தின் டேட்டா சேவையை துரிதப்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழக கிராமப்புறங்களிலும் வேகமான இணையதள சேவைகள் கிடைக்கும் வகையில் புதிதாக 12 ஆயிரம் மொபைல் சைட்டுகளின் எண்ணிக்கையை ஏர்டெல் அதிகரிக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்டுகளின் எண்ணிக்கை 52 ஆயிரமாக உயரும்.

மேலும் பிராட்பேண்ட் சேவையையும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த, தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு ஆப்டிக் பைபர் கேபிள்களை பதிக்கும் பணியிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பைபர் கேபிள்களின் மொத்த துாரம் 17 ஆயிரத்தை தொடும். இதன் மூலம் இன்னும் வேகமாக மொபைல்களில் இணையதள வசதி கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)