பதிவு செய்த நாள்
14 செப்2018
17:21
சென்னை : ஏர்டெல் நிறுவனம் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. முதன்முதலாக 4ஜி சேவையை நம் நாட்டில் அறிமுகம் செய்ததும் இந்த நிறுவனம் தான்.
இந்தியாவில் இணையதள வசதியுடன் கூடிய மொபைல் போன்களின் பயன்பாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஏர்டெல்லுக்கு 2.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாநிலத்திலும் நம்பர் - 1-ஆக இந்த நிறுவனம் திகழ்கிறது. இதற்கு இளைஞர்கள் தான் காரணம். அவர்களுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் வாடிக்கையாளர்களின் மனதை கவரவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்த ஏர்டெல் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
’புராஜெக்ட் லீப்’ என பெயிரிடப்பட்டுள்ள இத்திட்டம், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட இருக்கிறது. எதிர்கால தேவைகளையும், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும், தங்கள் நிறுவனத்தின் டேட்டா சேவையை துரிதப்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தமிழக கிராமப்புறங்களிலும் வேகமான இணையதள சேவைகள் கிடைக்கும் வகையில் புதிதாக 12 ஆயிரம் மொபைல் சைட்டுகளின் எண்ணிக்கையை ஏர்டெல் அதிகரிக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்டுகளின் எண்ணிக்கை 52 ஆயிரமாக உயரும்.
மேலும் பிராட்பேண்ட் சேவையையும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த, தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு ஆப்டிக் பைபர் கேபிள்களை பதிக்கும் பணியிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பைபர் கேபிள்களின் மொத்த துாரம் 17 ஆயிரத்தை தொடும். இதன் மூலம் இன்னும் வேகமாக மொபைல்களில் இணையதள வசதி கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|