பதிவு செய்த நாள்
15 செப்2018
00:04
சென்னை:இந்தியன் ஆயில் நிறுவனம், சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி, துணிகளை தேய்க்கும் வகையில் அயர்ன் பாக்ஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுத்துறையைச்
சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல்
உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடையில் சமையல் காஸ்
சிலிண்டர்களை
விற்பனை செய்கிறது. மேலும், 5 கிலோ சமையல் காஸ்
சிலிண்டரையும் விற்பனை செய்கிறது. இந்நிலையில், சென்னையில்,
இந்தியன் ஆயில் நிறுவனம், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டரில் இயங்கும்
அயர்ன் பாக்ஸ்களை, நேற்று அறிமுகம் செய்து உள்ளது.
இந்தியன்
ஆயில் நிறுவனம் முதல் கட்டமாக, 100 சலவைத் தொழிலாளர்களுக்கு, காஸ்
சிலிண்டரில் இயங்கும் அயர்ன் பாக்ஸ்களை வழங்கியது.அதன்படி, 5
கிலோ காஸ் சிலிண்டர், ரெகுலேட்டர், 1.5 மீட்டர் நீளமுள்ள ரப்பர்
குழாய் ஆகியவற்றின் மொத்த விலை, 1,366 ரூபாய். அயர்ன்பாக்சின் விலை,
7,000 ரூபாய்.சிலிண்டரில் காஸ் தீர்ந்த பின், 422 ரூபாய் செலுத்தி,
காஸ் நிரப்பிக்கொள்ளலாம். இந்த விலை மாதந்தோறும் மாறுதலுக்கு
உட்பட்டது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் காஸ்
சிலிண்டர் பிரிவிற்கான, சென்னை, துணை பொது மேலாளர், எஸ்.குமார்
கூறியதாவது:இவ்வகை அயர்ன் பாக்சில், ஓர் ஆடையை அயர்ன் செய்ய, 50
காசு மட்டுமே செலவாகும். இதுவே, கரியைப் பயன்படுத்தும்
அயர்ன்பாக்சில், 1.10 ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. ஐந்து கிலோ
சிலிண்டரில், 1,100 ஆடைகள் வரை அயர்ன் செய்ய முடியும். இதன் வாயிலாக,
கரியை எரிப்பது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசடைவதும்
தடுக்கப்படும்.
சமையல் காஸ் சிலிண்டரில் இயங்கும் அயர்ன்பாக்ஸ்
தொடர்பான விபரங்கள் மற்றும் வழிமுறைகளை, வீடுகளுக்கு காஸ்
சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜன்சிகளை தொடர்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|