பதிவு செய்த நாள்
15 செப்2018
00:09
திருப்பூர்:‘டாலர்’
மதிப்பு உயர்வால், வெளிநாட்டு மெஷின்கள் விலை, 10 சதவீதம்
அதிகரித்து, இறக்குமதியாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவுக்கு, ஆயத்த ஆடைகள், திருப்பூரிலிருந்து ஏற்றுமதியாகின்றன.ஆடை
உற்பத்திக்கு தேவைப்படும், ‘நிட்டிங், கட்டிங், தையல் மெஷின்,
காம்பாக்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி மெஷின், லேஸ்,
பட்டன், ஜிப்’ மற்றும் புதிய வகை துணி உட்பட பல பொருட்களை, திருப்பூர்
நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
ஏற்றுமதி
ஆடைகள் விலை, இறக்குமதி செய்யப்படும் மெஷின், ஆடை தயாரிப்புக்கான
சார்பு பொருட்கள் விலை, டாலர் மதிப்பு அடிப்படையிலேயே
நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், 67 ரூபாயாக இருந்த டாலர்
மதிப்பு, 72 ரூபாயை எட்டியுள்ளது. டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள
உயர்வு, ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழலை
உருவாக்கியுள்ளது.
ஆனால், அதே நேரம், இறக்குமதி துறையினருக்கு
பாதகமாக மாறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்
அனைத்து வகை மெஷின் விலையும், 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.திருப்பூரைச் சேர்ந்த, மெஷின் இறக்குமதியாளர், சீனிவாசன் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஏராளமான உள்நாட்டு ஆடை தயாரிப்பு
நிறுவனங்கள், புதிய தையல் மெஷின்களை வாங்க திட்டமிட்டிருந்தன. விலை
உயர்வால், விரிவாக்க திட்டங்களை தொழில் துறையினர்
கைவிட்டுள்ளனர். டாலர் மதிப்பு குறையும்போது, புதிய மெஷின்
வாங்கலாம் என, பலரும் காத்திருக்கின்றனர்.
இறக்குமதி
பட்டன், ஜிப், லேபிள் உள்ளிட்ட பொருட்கள் விலையும், 10 சதவீதம்
அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினங்களும் உயர்ந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|