பதிவு செய்த நாள்
15 செப்2018
00:11
புதுடில்லி:பொது நிறுவனங்கள், அவற்றின் நிர்வாகிகளின் ஊதியத்தை உயர்த்த, இனி மத்திய அரசின் அனுமதி தேவை இல்லை.
பொது
மற்றும் தனியார் நிறுவனங்கள், நிறுவன சட்டம், 2013ன் கீழ்,
செயல்பட்டு வருகின்றன. 200க்கும் மேற்பட்ட பங்கு முதலீட்டாளர்கள்
உள்ள நிறுவனங்கள், பொது நிறுவனமாக கருதப்படும். இவை, கார்ப்பரேட்
நிர்வாக நடைமுறைகளை, கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
வரம்புஇந்நிறுவனங்கள்
அவற்றின், நிகர லாப அடிப்படையில், நிர்வாகிகளின் ஊதிய வரம்பை
நிர்ணயிக்கலாம். இருந்தபோதிலும், அதற்கும் கட்டுப்பாடு உள்ளது.
அதன்படி,
ஒரு நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனருக்கான ஊதியம், நிகர
லாபத்தில், 1 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது.இது, முழு
நேர இயக்குனர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு, 10
சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஒரு
நிறுவனத்தின் நிகர லாபத்தில், 11 சதவீதத்திற்கு மேல்,
நிர்வாகிகளின் ஊதியச் செலவினம் இருக்கக் கூடாது என்ற விதிமுறை,
தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:பொது
நிறுவனங்கள், அவற்றின் நிகர லாபத்தில், 11 சதவீதத்திற்கு மேல்,
நிர்வாகிகளுக்கு ஊதியம் வழங்க, அமைச்சகத்திடம் அனுமதி பெறும்
விதிமுறை தளர்த்தப்படுகிறது.
இனி, பொது நிறுவனங்கள், மத்திய
அரசின் அனுமதியின்றி, விருப்பம் போல நிர்வாகிகளுக்கு ஊதியம்
வழங்கலாம். ஆனால், அந்த ஊதியத்திற்கு, 75 சதவீத பங்கு
முதலீட்டாளர்கள் அனுமதியை பெற வேண்டும். இதற்காக, பங்கு
முதலீட்டாளர்களின் கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும்.
கொள்கை
‘சிறிய அரசு – அதிகபட்ச நிர்வாகம்’ என்ற
மத்திய அரசின் கொள்கைப்படி, இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
தொழில் செய்வதை சுலபமாக்கும் நோக்கத்தில், இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறை, செப்., 12 முதல் அமலுக்கு
வந்துள்ளது.ஏற்கனவே ஏராளமான நிறுவனங்கள், நிர்வாகிகளுக்கு நிர்ணயித்த வரம்பிற்கு மேல் ஊதியம் வழங்க அனுமதி கோரி, அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளன.
இந்நிறுவனங்கள்,
அடுத்த ஓராண்டுக்குள், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலுடன்,
நிர்வாகிகளின் ஊதியத்தை உயர்த்திக் கொள்ளலாம்.இழப்பை சந்தித்து
வரும் நிறுவனங்கள் அல்லது போதிய லாபமீட்டாத நிறுவனங்கள்,
நிறுவனங்கள் சட்டம், அட்டவணை, 5ன்படி, ஊதியம் வழங்க வேண்டும்.
இதற்கும், மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை
தற்போது, இந்த அட்டவணைப்படி, நிறுவனங்கள், நிர்வாகிகளை நியமிக்கவும், அவர்களுக்
கான ஊதியத்திற்கும், ‘எம்.ஆர்–2’ என்ற மின்னணு படிவத்தில் விண்ணப்பிக்கின்றன.இனி,
நிர்வாகிகளின் நியமனத்திற்கு மட்டும், இந்த படிவத்தை
பயன்படுத்தலாம். ஊதிய ஒப்புதலுக்கு பயன்படுத்த தேவையில்லைஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திறமைக்கு ஏற்ற ஊதியம்
நாட்டில்,
70 ஆயிரம் பொது நிறுவனங்கள் உள்ளன. விதிமுறை தளர்வால், இனி
நிறுவனங்கள், திறமையான நிர்வாகிகளை, கூடுதல் ஊதியத்தில்
நியமிக்க முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|