இந்தாண்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.37 லட்சம் கோடியாக உயரும்இந்தாண்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.37 லட்சம் கோடியாக உயரும் ... டாலர் ஓடி வருமா? டாலர் ஓடி வருமா? ...
வாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2018
00:59

புதுடில்லி:மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்­கு­மாறு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டு வசூ­லித்த வாராக் கடனை விட, இரு மடங்கு அதி­கம். இந்­தாண்டு மார்ச்­சு­டன் முடிந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், இந்­திய வங்­கித் துறை­யின் வாராக் கடன், 10.25 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
இது, வங்­கித் துறை அளித்த கடன்­களில், 11.8 சத­வீ­த­மா­கும்.கடந்த நிதி­யாண்­டில் மட்­டும், வாராக் கடன், 3.13 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­க­ளின் வாராக் கடன், 8.97 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, 2.23 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கட­னு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது.அதிகரிக்கும்இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­களும், ரிசர்வ் வங்­கி­யின் புதிய விதி­மு­றை­களும், வாராக் கடன் வசூலை அதி­க­ரிக்க துணை புரிந்­துள்­ளன.
கடந்த ஆண்டு அம­லுக்கு வந்த, திவால் சட்­டத்­திற்கு அஞ்சி, பல நிறு­வ­னங்­கள் வாராக் கடனை திரும்­பச்செலுத்த துவங்­கி­ உள்­ளன.இத­னால், கடந்த நிதி­யாண்டை விட, நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடன் வசூல் அதி­க­ரிக்­கும் என, தெரி­கிறது.
இது குறித்து, மத்­திய அரசு மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:கடந்த நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­கள், 74 ஆயி­ரம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லித்­தன. நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், 36,500 கோடி ரூபாய் வாராக் கடன் வசூ­லா­கி­ உள்­ளது.
இதே காலத்­தில், வங்­கித் துறை­யின் வாராக் கடன், 10.25 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 10 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு குறைந்­துள்­ளது.இந்­நி­லை­யில், 3 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான வாராக் கடன் தொடர்­பாக, 80 நிறு­வ­னங்­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ கடந்த ஆகஸ்ட், 27ல் முடி­வ­டைந்­துள்­ளது. இக்­க­டன்­கள் தொடர்­பான தீர்வு மற்­றும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு அளித்த, 15 நாள் கூடு­தல் அவ­கா­ச­மும் கடந்த வாரம் முடிந்­தது.
திவால், ‘நோட்டீஸ்’
இதை­ய­டுத்து, கட­னுக்கு தீர்வு காண முன்­வ­ராத நிறு­வ­னங்­கள் மீது, வங்­கி­கள், தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், திவால் நோட்­டீஸ் அளிக்க உள்­ளன.அதே நேரத்­தில், சில நிறு­வ­னங்­கள், திவால் நட­வ­டிக்­கையை தவிர்க்க, வாராக் கடனை திரும்ப செலுத்த முன்­வந்­துள்­ளன.அத­னால், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடன் வசூல், ஜூலை – செப்., வரை, 75,000 – 80,000 கோடி ரூபா­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்த கணக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில், 2019, மார்ச்­சுக்­குள், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து, வங்­கி­க­ளுக்­கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பிரே­சில், ரஷ்யா, இந்­தியா, சீனா மற்­றும் தென் ஆப்­பி­ரிக்­காவை உள்­ள­டக்­கிய, ‘பிரிக்ஸ்’ நாடு­களை பொறுத்­த­வரை, வங்­கித் துறை­யில், அதிக அள­வில் வாராக் கட­னு­டன், இந்­தியா முத­லி­டத்­தில் உள்­ளது. ஸ்பெ­யின் உள்­ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடு­களில், அதிக வாராக் கட­னில், இந்­தியா, ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது.‘கேர்’ தர நிர்ணய நிறுவன ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)