பதிவு செய்த நாள்
17 செப்2018
23:17
புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்கா – சீனா இடையே நீடித்து வரும் வர்த்தகப் போர் பதற்றம், மீண்டும், ரூபாய் மதிப்பு, 72ஐ தாண்டி சரிந்தது போன்றவற்றால், இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நேற்று, அதிக அளவில் பங்குகள் கைமாறின.
இதனால், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 505.13 புள்ளிகள் சரிவடைந்து, 37,585.51 புள்ளிகளில் நிலை கொண்டது. இக்குறியீட்டில் உள்ள, 30 நிறுவனங்களில், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் உட்பட, 25 நிறுவன பங்குகள் விலை சரிவடைந்தன. இதையடுத்து, இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பில், 1.14 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஒரே நாளில், முதலீட்டாளர்கள் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களில், 1,441 நிறுவனப் பங்குகள், விலைச் சரிவை சந்தித்தன; 1,282 நிறுவன பங்குகள் விலை சற்று உயர்ந்தது; 191 நிறுவன பங்கின் விலை, ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 137.45 புள்ளிகள் குறைந்து, 11,377.75 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|