பதிவு செய்த நாள்
19 செப்2018
14:56
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் அதுதொடர்பான சாதனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையிலும் களமிறங்குகிறது.
வோல்டாஸ் நிறுவனமும், துருக்கியை சேர்ந்த ஆர்சிலிக் நிறுவனமும் இணைந்து வோல்டாஸ் பீகோ என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை அறிமுகம் செய்கிறது. முதற்கட்டமாக ரெப்ரெஜிரேட்டர், வாசிங் மிஷின், டிஷ்வாசர்ஸ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களை அறிமுகம் செய்துள்ளது.
மேங்கிங் இந்தியா திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டில் குஜராத்தின் சானந்த்தில் இதற்கான தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது. ஆர்சிலிக் நிறுவனத்துடன் இணைந்தது வோல்டாஸ் பீகோ நிறுவனத்தை துவங்குவது மகிழ்ச்சி என வோல்டாஸ் நிறுவனத்தின் பிரதீப் பாக்ஷி கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|