வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் களமிறங்கும் வோல்டாஸ்வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் களமிறங்கும் வோல்டாஸ் ... பங்கு வெளியீட்டில் ‘தினேஷ் இன்ஜினியர்ஸ்’ பங்கு வெளியீட்டில் ‘தினேஷ் இன்ஜினியர்ஸ்’ ...
கேரளாவில் 250 வீடுகளை கட்டித் தரும் ஜோய் ஆலுக்காஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2018
15:26

இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் முழுக்க பிரபலமான நகைக்கடை நிறுவனம் ஜோய் ஆலுக்காஸ். இந்நிறுவனம் கேரள மக்களுக்கு உதவ களமிறங்கி உள்ளது.

கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை, வெள்ளம், இந்த நூற்றாண்டு காணாத பேரழிவை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போனதுடன், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். கடவுளின் தேசம் என அழைக்கப்பட்ட கேரளா, தற்போது அதை இழந்து தவித்து வருகிறது. கேரளாவிற்கு நாடு தழுவிய உதவிகள் குவிந்தன. அம்மாநிலம் தனது பழயை நிலையை மீட்டெடுக்க போராடி வருகிறது.

இந்நிலையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், தங்களது ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை மூலமாக, வீடுகளை இழந்து தவித்து வரும் கேரள மக்களுக்கு, ரூ.15 கோடி மதிப்பில், 250 புதிய வீடுகளை கட்டித்தர இருக்கிறது.

ஒவ்வொரு வீடும், 600 சதுர அடி பரப்பளவில் இரண்டு படுக்கை அறை, சமயலறை, லிவ்விங் ரூம் மற்றும் சிட்டு அவுட் உடன் கூடிய கான்கிரீட் தளம் கொண்டு அமைக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.6 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கேரள அரசின் துணையோடு இந்த வீடுகளை கட்டித்தர ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

"எங்களின் கனவே, நாங்கள் கட்டித்தரும் இந்த வீடுகள் மூலமாக வீடுகளை இழந்து தவித்தவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான்" என இந்நிறுவனத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)