பதிவு செய்த நாள்
19 செப்2018
15:26
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் முழுக்க பிரபலமான நகைக்கடை நிறுவனம் ஜோய் ஆலுக்காஸ். இந்நிறுவனம் கேரள மக்களுக்கு உதவ களமிறங்கி உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை, வெள்ளம், இந்த நூற்றாண்டு காணாத பேரழிவை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போனதுடன், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். கடவுளின் தேசம் என அழைக்கப்பட்ட கேரளா, தற்போது அதை இழந்து தவித்து வருகிறது. கேரளாவிற்கு நாடு தழுவிய உதவிகள் குவிந்தன. அம்மாநிலம் தனது பழயை நிலையை மீட்டெடுக்க போராடி வருகிறது.
இந்நிலையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், தங்களது ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை மூலமாக, வீடுகளை இழந்து தவித்து வரும் கேரள மக்களுக்கு, ரூ.15 கோடி மதிப்பில், 250 புதிய வீடுகளை கட்டித்தர இருக்கிறது.
ஒவ்வொரு வீடும், 600 சதுர அடி பரப்பளவில் இரண்டு படுக்கை அறை, சமயலறை, லிவ்விங் ரூம் மற்றும் சிட்டு அவுட் உடன் கூடிய கான்கிரீட் தளம் கொண்டு அமைக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.6 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கேரள அரசின் துணையோடு இந்த வீடுகளை கட்டித்தர ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
"எங்களின் கனவே, நாங்கள் கட்டித்தரும் இந்த வீடுகள் மூலமாக வீடுகளை இழந்து தவித்தவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான்" என இந்நிறுவனத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|