‘முதலீடு செய்ய விருப்பமான மாநிலங்களில் தமிழகம் முன்னோடி’ ‘முதலீடு செய்ய விருப்பமான மாநிலங்களில் தமிழகம் முன்னோடி’ ... சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு ...
அவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; விரைவில் சுங்க வரி உயர்வு அறிவிப்பு வெளியாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2018
23:40

புதுடில்லி : அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், அவற்­றுக்­கான சுங்க வரி உயர்வை, மத்­திய அரசு விரை­வில் அறி­விக்க உள்­ளது.

அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர் பதற்­றம், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம் உள்­ளிட்ட சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளால், ரூபாய் வெளி மதிப்பு கடு­மை­யாக சரி­வ­டைந்­துள்­ளது. இந்­தாண்­டில், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 13 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இதில், கடந்த ஆகஸ்ட் முதல், தற்­போது வரை, 6 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

செலவினம் :
இத்­து­டன், கச்சா எண்­ணெய் விலை­யும் உயர்ந்­துள்­ள­தால், நாட்­டின் இறக்­கு­ம­தி செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ளது. நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, இலக்கை விஞ்சி, 2.8 சத­வீ­த­மாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, 2015- – 16 மற்­றும் 2016 -– 17ல், முறையே, 0.6 சத­வீ­தம் மற்­றும், 1.9 சத­வீ­தம் என்ற அள­வில் இருந்­தது.

ஏற்­று­ம­தியை விட, இறக்­கு­மதி உயர்ந்­துள்­ள­தால், நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­கு­றை­யும் அதி­க­ரித்­துள்­ளது. இந்­தாண்டு, ஏப்­ரல் – ஆகஸ்ட் வரை­யி­லான ஐந்து மாதங்­களில், வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 8,040 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்­தில், 6,730 கோடி டால­ராக இருந்­தது.

இந்த சவாலை சமா­ளிக்க, மத்­திய அரசு, ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்­டுள்­ளது. அத்­து­டன், அவ­சி­ய­மற்ற பொருட்­கள் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­த­வும் முடிவு செய்­து உள்­ளது.

குறுகிய கால தாக்கம் :
இது குறித்து, மத்­திய பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை செய­லர், சுபாஷ் சந்­திர கார்க் கூறி­ய­தா­வது: டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் ஏற்­படும் திடீர் ஏற்­றத்­தாழ்­வு­கள், குறு­கிய கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது வழக்­கம். கடந்த சில வாரங்­களில், ரூபாய் வெளி மதிப்பு, 10 சத­வீ­தத்­திற்­கும் மேலாக குறைந்­துள்­ளது. இது தற்­கா­லிக தாக்­கம் தான்.

மத்­திய அரசு, ரூபாய் மதிப்­பின் சரிவை தடுக்­க­வும், நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை கட்­டுக்­குள் வைக்­க­வும், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. விரை­வில், அவ­சி­ய­மற்ற பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பாடு விதிக்­க­வும், வரியை உயர்த்­த­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

இந்­திய நிறு­வ­னங்­கள், வெளி­நாட்டு கடன்­களை திரட்ட, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும். மேலும், உலக வர்த்­தக அமைப்­பின் விதி­க­ளுக்கு உட்­பட்டு, அவ­சி­ய­மற்ற பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­படும் என, கடந்த வாரம் மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண்­ ஜெட்லி தெரி­வித்­தி­ருந்­தார்.

வேளாண் பொருட்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் :
நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை குறைக்க, நாட்­டின் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். இந்­தியா, 3,000 கோடி டாலர் மதிப்­பி­லான வேளாண் பொருட்­களை ஏற்­று­மதி செய்­கிறது. இதை, 10 ஆயி­ரம் கோடி டால­ராக உயர்த்த, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை தளர்த்த முடிவு செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)