பதிவு செய்த நாள்
20 செப்2018
23:19
மும்பை : ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானியின் மகள், இஷா அம்பானிக்கும், பிரமால் குழும தலைவர், அஜய் பிரமால், மகன், ஆனந்த் பிரமாலுக்கும், இத்தாலியில் இன்று நிச்சயதார்த்த விழா நடைபெற உள்ளது.
இத்தாலியின், லேக் கோமோ நகரில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வரும் ஞாயிறு வரை, மூன்று நாட்களுக்கு கோலாகலமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவில், அரசியல் தலைவர்கள், திரைஉலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம், மும்பையில், முகேஷ் அம்பானியின் ஆடம்பர, ‘அன்டிலியா’ குடியிருப்பில், ஆனந்த் – இஷாவுக்கு, ‘கோர் தானா’ எனப்படும், திருமணத்திற்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களின் திருமணம், வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் மாதம், முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லேகா மேத்தாவுக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|