பதிவு செய்த நாள்
21 செப்2018
13:40
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் திடீரென நண்பகலில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 11,100 புள்ளிகளுக்கு கீழும் சென்றன.
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்., 21) வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் ஆரம்பமாகின.
வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 37,427.10-ஆகவும், நிப்டி 84.15 புள்ளிகள் உயர்ந்து 11,318.50-ஆகவும் வர்த்தகமாகின. ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன.
சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி
அதன்பிறகு வர்த்தகம் மெல்ல மெல்ல சரிய தொடங்கின. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் நண்பகலில் அநேக பங்குகள் வீழ்ச்சி கண்டன. இதன் காரணமாக சென்செக்ஸ் திடீரென 1000 புள்ளிகளும், 11,100 புள்ளிகளுக்கு கீழும் சென்றன. இருப்பினும் சிறிது நேரத்திலேயே இந்த வீழ்ச்சி குறைய தொடங்கியது. நண்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 186 புள்ளிகளும், நிப்டி 63.5 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகமாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|