வீழ்ந்து எழுந்த பங்குச்சந்தைகள்வீழ்ந்து எழுந்த பங்குச்சந்தைகள் ... ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம் ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம் ...
55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
23:29

மும்பை : இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக நிதி நிலை அறிக்­கை­களை சமர்ப்­பிக்­காத நிறு­வ­னங்­கள் உட்­பட, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவை நீக்­கி­யுள்­ளது, மத்­திய அரசு.

ஒரு நிறு­வ­னம், முற்­றாக செயல்­ப­டா­மல் இருந்­தாலோ அல்­லது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல், நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யா­மல் இருந்­தாலோ, அந்த நிறு­வ­னத்­தின் பதிவு ரத்து செய்­யப்­படும். இதன்­படி, கடந்த ஆண்டு டிசம்­பர், 12ம் தேதி வரை, 2 லட்­சத்து, 26 ஆயி­ரத்து, 166 நிறு­வ­னங்­களின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டது. தற்­போது, இரண்­டாம் கட்­ட­மாக, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவு அதி­ர­டி­யாக ரத்து செய்­யப்­பட்­டு உள்­ளது.

இது குறித்து, மத்திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், பி.பி.சவுத்ரி கூறி­ய­தா­வது: முதற்­கட்­ட­மாக பதிவு ரத்து செய்­யப்­பட்ட, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­களில் பல, நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யா­தவை. ஆனால், பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் போலி நிறு­வ­னங்­கள் ஆகும். இவற்­றில், 400க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு, ஒரே ஒரு அறை மட்­டுமே இருந்­தது.

தற்­போது இரண்­டாம் கட்­ட­மாக, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்­கை­கள் மேலும் தொட­ரும். நிதி முறை­கேடு, போதை பொருட்­க­ளுக்கு பணம் வழங்­கு­வது, சட்­டத்­துக்கு புறம்­பான வழி­களில் செயல்­ப­டு­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்­கள் மீது, அரசு தகுந்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

‘கார்ப்­ப­ரேட்’ என்ற பெயரை தவ­றாக பயன்­ப­டுத்­து­வதை அரசு அனு­ம­திக்­காது. சட்­டத்­துக்கு புறம்­பாக செயல்­ப­டு­வ­தாக தெரிய வந்த சில நிறு­வ­னங்­க­ளுக்கு, விளக்­கம் கேட்டு கடி­தம் அனுப்பி உள்­ளோம். அதற்கு, அவை என்ன பதி­ல­ளித்­துள்ளன என்­பதை ஆய்வு செய்து வரு­கி­றோம். ஆய்­வுக்கு பின், அவற்­றின் மீது நிறு­வன சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)