பதிவு செய்த நாள்
23 செப்2018
03:10
புதுடில்லி: நிறுவனங்களில் இயக்குனராக உள்ளோர், கே.ஒய்.சி., எனப்படும், தன் விபரக் குறிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பதற்கான, ‘கெடு’ அக்., 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த படிவத்துடன் அளிக்க வேண்டிய பதிவுக் கட்டணமும், 5,000 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.போலி நிறுவனங்களை களையெடுக்கும் நடவடிக்கையுடன், பெயரளவில் இயங்கும் போலி இயக்குனர்களையும் அடையாளம் காணும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இதற்காக, பதிவு செய்த அனைத்து நிறுவனங்களின் இயக்குனர்களும், கே.ஒய்.சி., படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடையாள எண் /: மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு, டி.ஐ.என்., எனப்படும், இயக்குனர் அடையாள எண் வழங்கப்படுகிறது.இந்த சான்று இல்லாதோர், எந்தவொரு பதிவு பெற்ற நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும், இயக்குனராக பொறுப்பேற்க முடியாது.இந்நிலையில், ‘பதிவு பெற்ற நிறுவனங்களின் இயக்குனர்கள் அனைவரும், கே.ஒய்.சி., படிவத்தை பூர்த்தி செய்து, 5,000 ரூபாய் கட்டணத்துடன், செப்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.ஆனால், 33 லட்சம் இயக்குனர்களில், 12.15 லட்சம் பேர் தான், தன் விபரக் குறிப்பு படிவத்தை, கெடுவுக்குள் அளித்துள்ளனர்.முடக்கம்இதையடுத்து, கே.ஒய்.சி., வழங்காத இயக்குனர்களின் அடையாள எண்ணை, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் முடக்கியது. இதனால், கே.ஒய்.சி., தராதோர், தொடர்ந்து இயக்குனர்களாக நீடிக்க முடியாத சூழல் உருவானது.இந்நிலையில், ‘இயக்குனர்கள், தன் விபரக் குறிப்பு படிவத்தை அளிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்; அத்துடன், பதிவுக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்’ என, இந்திய நிறுவன செயலர்கள் மையம், மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது.அதை ஏற்று, ‘கே.ஒய்.சி., படிவத்தை அளிப்பதற்கான கெடு, அக்., 6 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது; அத்துடன், பதிவுக் கட்டணம், 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது’ என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.இதே தொகைக்கு, இயக்குனர்கள் தங்களின் முடக்கப்பட்ட அடையாள எண்ணை, கெடு காலத்திற்குள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்; தவறுவோர், 5,000 ரூபாய் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.பயன்படுத்தி கொள்ள வேண்டும்மத்திய அரசு, கே.ஒய்.சி., நடைமுறைக்கு கூடுதல் அவகாசம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், நம் கோரிக்கையை ஏற்று, பதிவு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை, இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, தன் விபர படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.மகரந்த் லீலீ தலைவர், இந்திய நிறுவன செயலர்கள் மையம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|