பதிவு செய்த நாள்
23 செப்2018
23:22
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, மூன்று வாரங்களாக தொடர் சரிவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முதன்முறையாக, அதிகப்படியான வார சரிவை சந்தித்தது கடந்த வாரம் தான்.
இதனால், பல பங்குகள் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, வங்கி சாரா நிறுவன பங்குகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின. திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் யெஸ் பேங்க் போன்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு மற்றும் குழப்பம் காரணமாக, அசாதாரண சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை அதிகப்படியாக விற்பனை செய்தனர். இதன் காரணமாக, சந்தை வலுவிழந்து வர்த்தகமாகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது. இதனால், இந்தியாவின் இறக்குமதி சுமை அதிகரித்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையிலும் கடந்த வாரம் உயர்வு ஏற்பட்டது. இன்று, ஜப்பான் மற்றும் சீன பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை நாளாகும். மேலும் வரும் புதன் கிழமை அன்று, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
வரும் வியாழன் அன்று, பங்குகளின் செட்டில்மென்ட் தினமாகும். அதனால், அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.இந்த வாரம் மேற்கூறிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, சந்தையில் மாற்றங்கள் நிகழும்.
கவனிக்க வேண்டிய பங்குகள் :
ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல்., டி.எச்.எப்.எல்., இன்ஜினியர்ஸ் இந்தியா, இன்போசிஸ்
– முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|