பதிவு செய்த நாள்
23 செப்2018
23:43
சேதமடைந்த அல்லது கிழிந்த ரூபாய் நோட்டை வங்கி கிளைகள், ரிசர்வ வங்கி அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம். இதற்கான நடைமுறை: ரிசர்வ் வங்கி விதிமுறைகள் படி, பயன்பாட்டினால் சேதம்அடைந்த நோட்டுகள், கிழிந்த நோட்டுகள் மற்றும் மாற்றி ஒட்டப்பட்ட நோட்டுகள் ஆகிய மூன்று வகை ரூபாய் நோட்டுகளை மாற்றி, அதற்கு பதிலாக உரிய பணம் பெற்றுக்கொள்ளலாம்.
ரூபாய் நோட்டு மீது வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தாலும் அவை செல்லும். இத்தகைய நோட்டுகளையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அரசியல் வாசகம் எழுதப்பட்ட நோட்டுகள், செல்லாதவையாக கருதப்படும். மிகவும் மோசமாக சேதமடைந்த மற்றும் எரிந்த நிலையில் இருக்கும் நோட்டுகளை மாற்ற, வங்கிகள் மறுக்கலாம்.
சேதமடைந்த ரூபாய் நோட்டை மாற்றி பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும், எல்லா நேரங்களிலும் முழுத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை. கிழிந்த நோட்டுகளை பொறுத்தவரை, பிரியாமல் இருக்கும் பெரிய துண்டின் பரப்பு, மொத்த சேதமாகாத பரப்பின், 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான் முழுத்தொகை கிடைக்கும். பெரியத்துண்டு, 40 சதவீதத்திற்கு மேல், ஆனால், 80 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், 50 சதவீத மதிப்பு கிடைக்கும். பெரிய துண்டு இதற்கும் கீழ் இருந்தால், பணம் கிடைக்காது.
இரு வேறு நோட்டுகள் ஒன்றாக ஒட்டப்பட்ட நிலையில், பெரிய மதிப்பிலான நோட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒட்டப்பட்டவை, 50 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவை தனித்தனியே கருதப்படும். அவற்றின் தனி அளவிற்கு ஏற்ப, பணம் அளிக்கப்படும். சேதமடைந்த நோட்டுகளை சேமிப்பு கணக்கிலும் செலுத்தலாம். இவை பின்னர் புழக்கத்திற்கு வராது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|