பதிவு செய்த நாள்
24 செப்2018
10:26
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.,24) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. நிப்டி 11,100 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 210.22 புள்ளிகள் சரிந்து 36,924.72 புள்ளிகளாகவும், நிப்டி 65.50 புள்ளிகள் சரிந்து 11,077.60 புள்ளிகளாகவும் உள்ளன. கடந்த 4 நாட்களில் பங்குச்சந்தைகள் 1249.04 புள்ளிகள் சரிந்துள்ளது. ஆட்டோ, வங்கித்துறை பங்குகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விற்றதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததாகவும் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோ கார்ப், கோடாக் வங்கி, அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி பங்குகள் 2.32 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|