பதிவு செய்த நாள்
25 செப்2018
07:15
மும்பை : கடந்த ஜூன், 30 நிலவரப்படி, நாட்டில் வழங்கப்பட்ட மொத்த சில்லரை கடன்களில், தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள், 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
தனி நபர் கடன், நுகர்வோர் சாதன கடன், கல்வி கடன், வாகன கடன் உள்ளிட்டவை, சில்லரை கடன் பிரிவில் அடங்கிஉள்ளன. இப்பிரிவு குறித்து, கடன் மதிப்பீட்டு நிறுவனமான, ‘டிரான்ஸ்யூனியன் சிபில்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூன் நிலவரப்படி, சில்லரை கடன் வழங்கியதில், மஹாராஷ்டிரா, 5,50,200 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இது, மொத்த சில்லரை கடனில், 20 சதவீதமாகும். அடுத்த இடங்களில், தமிழகம் மற்றும் கர்நாடகா, முறையே, 2,77,400 கோடி மற்றும் 2,74,900 கோடி ரூபாயுடன் உள்ளன.
மொத்த சில்லரை கடனில், 10 மாநிலங்கள், 21,27,400 கோடி ரூபாயுடன், 76 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. கடந்த ஆண்டு, ஏப்., – ஜூன் காலாண்டை விட, இந்தாண்டு, இதே காலாண்டில், சில்லரை கடன்கள், 27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இதில், தனி நபர் கடன், ‘கிரெடிட் கார்டு’ கடன் ஆகியவற்றின் வளர்ச்சி, முறையே, 43 சதவீதம் மற்றும் 42 சதவீதமாக உள்ளது. வீட்டு வசதி கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் பிரிவில், தவணை செலுத்த தவறுவது அதிகரித்து வருகிறது. அதேசமயம், வாகன கடன், தனி நபர் கடன், இரு சக்கர வாகன கடன் ஆகியவற்றில் குறைந்து வருகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேவை அதிகரிப்பு :
பெருகி வரும் நுகர்வோரின் கடன் தேவை, கடன் வழங்குவோரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கடன் தவணை தவறுவதும், கட்டுக்குள் உள்ளது. இதனால், சில்லரை கடன் பிரிவு வளர்ச்சி கண்டு வருகிறது
–யோகேந்திர சிங், துணை தலைவர், ஆய்வு பிரிவு, டிரான்ஸ்யூனியன் சிபில்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|