பதிவு செய்த நாள்
25 செப்2018
07:16
‘‘இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, ‘சாப்ட்பேங்க் மற்றும் என்.டி.டி., கம்யூனிகேஷன்’ நிறுவனங்களுடன், பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம் செய்துள்ளது,’’ என, பி.எஸ்.என்.எல்., தலைவரும், நிர்வாக இயக்குனருமான, அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள விபரம்: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த, ஜப்பான் நிறுவனங்களான, சாப்ட்பேங்க் மற்றும் என்.டி.டி., கம்யூனிகேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் பரிசோதனை அடிப்படையில், 5ஜி சேவையை எங்கு பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட களப்பணி ஆய்வுகளை துவங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளோம். இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|