பதிவு செய்த நாள்
25 செப்2018
23:45
சென்னை : ‘‘சாகர்மாலா திட்டத்தின் கீழ், 499 திட்டங்கள், பல்வேறு நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளன,’’ என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், ‘பொருளாதார மேம்பாட்டில், துறைமுகங்களின் பங்கு’ என்ற தலைப்பில், இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டம், சென்னையில், நேற்று துவங்கியது. இதில், ‘சி.ஐ.ஐ., துறைமுகம் கலந்தாய்வு – 2018’ என்ற விழா மலரை, பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது: ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், புதிய துறைமுகம் அமைத்தல், பழைய துறைமுகங்களை நவீனப்படுத்துதல், கடலோரப் பகுதிகளை மேம்படுத்துதல், துறைமுக வழித்தடங்களை மேம்படுத்துதல் போன்ற, 599 திட்டங்களை, 5.57 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டது. இவற்றை, 2015 – 2035ம் ஆண்டுக்குள் முடிக்க, கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 499 திட்டங்கள், 4.25 லட்சம் கோடி ரூபாய் செலவில், பல்வேறு நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள துறைமுகங்களை, உலக தரத்துக்கு உயர்த்த வேண்டியுள்ளது. நாட்டின், 95 சதவீத வெளிநாட்டு வர்த்தகங்கள், துறைமுகம் வழியாக நடைபெறுகின்றன. சரக்கு கட்டணங்களை குறைப்பதே, சாகர்மாலா திட்டத்தின் பிரதான நோக்கம். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், இனயம் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் முடிந்து, அறிக்கை பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை, விரைவில் மேற்கொள்ளப்படும். சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் குறித்த கலந்தாய்வு, 10 நாட்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|