பதிவு செய்த நாள்
25 செப்2018
23:47
புதுடில்லி : 'கடன் பிரச்னையில் உள்ள, ஐ.எல்.அண்டு எப்.எஸ்., நிறுவனத்தை நலிவடைய விடமாட்டோம்' என, எல்.ஐ.சி., நிறுவன தலைவர் வி.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்பு பணிகள் மற்றும் நிதிச் சேவைகளில் ஈடுபட்டு வரும், ஐ.எல். அண்டு எப்.எஸ்., நிறுவனம், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. அதில், வங்கிக் கடன், 57 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்நிறுவனத்தில், எல்.ஐ.சி., 25 சதவீத பங்கு மூலதனத்துடன், பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது. இந்நிலையில், ஐ.எல். அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஐ.எல் அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் சர்வீசஸ், நேற்று முன்தினம், சி.பி., எனப்படும் வர்த்தக ஆவணங்கள் அடிப்படையிலான கடனை, திரும்பத் தர தவறியது.
இதுபோல, இம்மாதத்தில் மூன்று முறை நடைபெற்றதால், ஐ.எல். அண்டு எப்.எஸ்., துணை நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வருகிறது. இந்நிலையில், ‘‘ஐ.எல். அண்டு எப்.எஸ்., நலிவடைய விட மாட்டோம் ; கூடுதல் பங்கு மூலதனம் மேற்கொள்வது உள்ளிட்ட வழிகளை ஆராய்ந்து வருகிறோம்,’’ என, வி.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|