பதிவு செய்த நாள்
11 அக்2018
00:55
மும்பை:நிதிச் சேவை துறையில் உள்ள, ‘கிறிஸ் கேப்பிடல் அட்வைசர்ஸ்’ நிறுவனத்தின் ஆலோசகராக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.ஐ., தலைவராக, நான்கு ஆண்டுகள் பணியாற்றிய, அருந்ததி பட்டாச்சார்யா, 2017 அக்டோபரில் ஓய்வு பெற்றார்.இதையடுத்து, அவர், கிறிஸ் கேப்பிடல் அட்வைசர்ஸ் நிறுவனத்தில், ஆலோசகராக இணைந்துள்ளார். அவர், நிறுவனத்தின் செயல் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் என, கிறிஸ் கேப்பிடல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கேப்பிடல் நிறுவனம், மேக்மா பின்கார்ப், ஹீரோ பின்கார்ப், தேசிய பங்குச் சந்தை உள்ளிட்ட நிறுவனங்களில், பங்கு மூலதனம் மேற்கொண்டு உள்ளது.ஏற்கனவே, ஆக்சிஸ் வங்கி, செஞ்சூரியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் முதலீடு செய்துள்ளது.
வங்கித் துறையில் உயர் பதவி வகிப்போர், ஓய்வு பெற்ற பின், பங்கு முதலீட்டு நிறுவனங்களில் ஆலோசகராக சேர்வது வாடிக்கையாக உள்ளது.
ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர், ஆனந்த் சின்கா, 2015ல், ஓய்வு பெற்ற பின், சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்.,இல் ஆலோசகராக இணைந்தார்.தொழிலதிபர் ரத்தன் டாடா, ‘கலாரி கேப்பிடல், ஜங்கிள் வெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட சில துணிகர முதலீட்டு நிறுவனங்களில், ஆலோசகராக உள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|