பதிவு செய்த நாள்
12 அக்2018
00:04
சேலம்:தமிழகத்தில் பண்டிகை விற்பனைக்காக, பலகார தயாரிப்பு துவங்கி உள்ள நிலையில், மைதா, ரவை, கோதுமை வரத்து சரிந்துள்ளது. இதையடுத்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தின், மைதா, ரவை, கோதுமை தேவையில், 80 சதவீதத்தை மஹா ராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. தமிழகத்தில், 20 சதவீதம் மட்டுமே தயார் செய்யப்படுகின்றன.நவராத்திரி பண்டிகை துவங்கி, அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், வட மாநிலத்தில் இருந்து மைதா, ரவை உள்ளிட்டவற்றின் வரத்து சரிந்துள்ளதால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் கோதுமை முதல் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்றது, 38 ரூபாயாகவும்; இரண்டாம் ரகம், 34 ரூபாய்க்கு விற்றது, 36 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.மத்திய பிரதேச கோதுமை, முதல் ரகம் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது, 32 ரூபாயாகவும்;இரண்டாம் ரகம், 28 ரூபாய்க்கு விற்றது, 30 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.குஜராத் கோதுமை, முதல் ரகம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்றது, 27 ரூபாயாகவும்; இரண்டாம் ரகம், 23 ரூபாய்க்கு விற்றது, 25 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
கோதுமை விலை உயர்வால், அதை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும், மைதா விலையும் உயர்ந்துள்ளது.மைதா முதல் ரகம் கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது, 42 ரூபாயாகவும்; இரண்டாம் ரகம், 35 ரூபாய்க்கு விற்றது, 37 ரூபாயாகவும்; மூன்றாம் ரகம், 33 ரூபாய்க்கு விற்றது, 35 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
ரவை முதல் ரகம் கிலோ, 42 ரூபாய்க்கு விற்றது, 44 ரூபாயாகவும்; இரண்டாம் ரகம், 37 ரூபாய்க்கு விற்றது, 39 ரூபாயாகவும்; மூன்றாம் ரகம், 35 ரூபாய்க்கு விற்றது, 37 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, பலகார தயாரிப்பாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|